districts

img

திறக்கப்படாத புதிய வேளாண் விரிவாக்க மையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம்

தாராபுரம், மார்ச் 15 - தாராபுரத்தில் ரூ. 2 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் ஆறு மாதங்கள் ஆகியும் திறக்கப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகி றது. தாராபுரம் வட்டார பகுதி முற்றிலும் விவ சாயம் சார்ந்த பகுதியாகும். தாராபுரம் வட்டா ரத்தில் பழைய அமராவதி பாசனத்தில் 8 ஆயி ரத்து 200 ஏக்கரும், புதிய அமராவதி பாசனத் தில் 9 ஆயிரத்து 800 ஏக்கரும், பிஏபி பாசனத் தில் 12 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறு கிறது. மேலும் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில்  மானாவாரி சாகுபடியும், கிணற்று பாசனத் தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடியும் செய் யப்படுகிறது. உப்பாறு பாசன பகுதியில் 6  ஆயிரத்து 800 ஏக்கர் பாசன வசதி பெறுகி றது. விவசாயிகள் நெல், கரும்பு, வெங்கா யம், மக்காச்சோளம் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து பயன் அடைந்து வருகின் றனர். இந்நிலையில், தாராபுரம் நகரில் தனித் தனியாக பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த உதவி வேளாண்மை இயக்குனர் அலு வலகம், வேளாண் பொறியியல் அலுவல கம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், வேளாண் வணிக அலுவலகம் மற்றும் விதை  சான்று ஆய்வாளர் அலுவலகம் ஆகிய வற்றை ஒரே இடத்தில் செயல்படுவதற்கு ஏது வாக ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என பல வருடங் களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்த னர்.  இதை ஏற்று கடந்த 2020 ஆம் ஆண்டு  ஏற்கனவே தாராபுரம் பைபாஸ் ரோடு வசந்தம்  நகரில் செயல்பட்டு வந்த வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை இடித்து விட்டு, அதே பகுதியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தை அமைக்க ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்தது..

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வேளாண் அலுவலகங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்டிட  பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்கள் ஆகி யும் இந்த மையம் இதுவரை திறக்கப்பட வில்லை. இதுகுறித்து விவசாயிகள், தமிழக முதல் வர், வேளாண்மை துறை அமைச்சர், மற்றும்  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிக ளுக்கு மனுக்கள் அனுப்பியும், இன்றுவரை திறக்கப்படவில்லை. இதனால் புதிதாக கட் டப்பட்ட கட்டிடத்தை சுற்றிலும் புற்கள் முளைத்துள்ளன. மேலும் சமூக விரோதி கள் உள்ளே சென்று மது அருந்துகிறார்கள்.  இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கை யில், தாராபுரம் வட்டாரத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி ஏராளமான விவசாயிகள் உள் ளனர். தற்போது பல்வேறு பகுதிகளில் வேளாண்மைதுறை அலுவலகங்கள் செயல் பட்டு வருவதால் விவசாயிகள் சிரமம் ஏற் படுகிறது. கட்டட பணிகள் முடிவடைந்து ஆறு  மாதங்களாகியும் இந்த மையம் திறக்கப் படாமல் உள்ளது கவலையை அளிக்கிறது.  உடனடியாக தமிழக முதல்வர் ஒருங்கி ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை திறக்க உத்தரவிட வேண்டும். மேலும் அனைத்து அலுவலகங்களையும் அங்கு உடனடியாக மாற்றி செயல்பாட்டிற்கு  கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர். (ந.நி)