சேலம், மே 21- தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டத்தில் தேசிய சப் – ஜூனியர் வலுதூக்கும் போட்டி மே 12 ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி, மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய வீராங்கனையும், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியுமான உமா மகேஸ்வரி, 84 கிலோ எடை பிரி வில் ஒட்டுமொத்தமாக 315 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார். மேலும், இதே உடற்பயிற்சி நிலையத் தில் பயிற்சி பெற்ற பிரியா 69 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், லாவண்யா 47 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், பவதாரணி 47 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்க மும், ஜாஸ்மின் 52 கிலோ எடை பிரிவில் வெண்கலம் பதக்கமும் வென்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகராட்சி, 4 ஆவது மண்டலக்குழு தலைவர் அசோகன், மாமன்ற உறுப்பினர் கோபால், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் ஓ.டெக்ஸ் இளங்கோவன், உடற்பயிற்சி நிலைய செயலாளர் பொன் சடையன், தலைவர் தெய்வப்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும், தமிழ் நாடு வலுத்தூக்கும் சங்க தலைவர், சங் கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, செயலாளர் எஸ்.நாகராஜன் ஆகி யோரும் வீராங்கனைகளுக்கு பாராட்டு களை தெரிவித்தனர்.