திருப்பூர், ஜூலை 19- பெருமாநல்லூர் நால் ரோட்டின் நடுவே தனியார் நிறுவனத் தின் கேஸ் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழாய் பதிக்கும் இடத்தில் அக்கம்பெனி தினமும் நடு இரவில் குழாய் வழியே பவுடர் கலந்த நீரை கடந்த 10 நாட்களாக வெளியேற்றி சோதனை செய்து வருகிறது. இதனால், அவ்வி டத்தில் நீர் வெளியேறி அந்த இடம் முழுவதும் சேறும், சகதியு மாக காணப்படுகிறது. இதன் காரணமாக பொது மக்களுக் கும், பள்ளி மாணவர்கள் போக்குவரத்திற்கும் மிகுந்த இடை யூறாக உள்ளது. குறிப்பாக திருப்பூர் - கோபி, அவிநாசி - சேலம் என நான்கு வழிச்சாலையின் முக்கிய சந்திப்பாக இந்த இடம் உள்ளது. அவ்விடத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு 12 அடி ஆழத்தில் குழியும் வெட்டி வைத்துள்ளனர். இதனால், பல விபத்துக்கள் நடக்கின்றன. உயிர் பலி ஏற்படும் முன்பு உடனடி யாக குழியை மூடி பாதை சரி செய்ய வேண்டும் என்று பெருமா நல்லூர் ஊர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.