கோவை, டிச.18- சிறுபான்மையின மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும், முதல்வரின் கவனத் திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ் தான் தெரிவித்தார். கோவை நிர்மலா மகளிர் கல் லூரியில், மாநில சிறுபான்மையி னர் ஆணையத்தின் சார்பில், திங் களன்று சிறுபான்மையினர் உரிமை கள் தின விழா நடைபெற்றது. இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ் தான் ஆகியோர் கலந்து கொண்டு, 115 பயனாளிகளுக்கு ரூ.18.60 லட் சம் மதிப்பிலான நலத்திட்ட உத விகளை வழங்கினர். அப்போது அமைச்சர் சு.முத்துசாமி பேசு கையில், “அனைவரும் சமம்” என்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். எந்த பிரச்சனை யாக இருந்தாலும் அதில் உள்ள வற்றை அலசி ஆராய்ந்து உடனடி யாக அதற்கு தீர்வு காண்பது என் பது நம்முடைய அரசாக உள்ளது. எனவே, சிறுபான்மையின மக்க ளின் கோரிக்கைகள் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது எங்களுடைய கடமை. சிறுபான்மையினர் அனைவ ரையும் ஒன்றிணைப்பதற்கு இவ் விழா சிறப்பான வாய்ப்பாக அமைந் துள்ளது, என்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசுகை யில், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற் காக ஒவ்வொரு ஆண்டும் டிச.18 ஆம் தேதிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கொண்டாடப் படுகிறது.
அரசின் பல்வேறு நிதிச் சுமைகளுக்கிடையில், சிறுபான் மையினர் மக்களுக்கான நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதி களை வழங்கி பல்வேறு திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இந்நிகழ்ச்சியில், சிறுபான் மையின மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கைகள் முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றப்படும் என உறுதிய ளித்தார். முன்னதாக, கோவை மாவட்ட மூஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்துக்கு கோவை அத்தர் ஜமாத் நிர்வாகம் சார்பாக ரூ.2 லட்சம் நன்கொடையாக பீர்மு கமது ஆசிக், சையது உசேன் ஆகி யோர் அமைச்சர்களிடம் வழங் கினர். மேலும், ஜெயின் சமூகத் தைச் சேர்ந்தவர்கள் சிறுபான் மையினர் சான்றிதழ் பெற பரிந் துரைக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பாக ஜி கோயம்புத்தூர் ஜெயின் மகா சங்கத்தை அங்கீ கரித்து, அதற்கான ஆணையினை பகவர்லால் கோத்தாரியிடம் அமைச்சர்கள் வழங்கினர். இவ்விழாவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா.பீட்டர் அல் போன்ஸ், துணைத்தலைவர் கலை மாமணி டாக்டர்.இறையன்பன் குத்தூஸ், சிறுபான்மையினர் நலத் துறை அரசு செயலாளர் பீட்டர் ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு சிறுபான் மையினர் ஆணைய செயலர் வா.சம்பத், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா, இனிகோ இருதயராஜ், நிர்மலா மகளிர் கல்லூரி செயலாளர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி பேபி யோலா உட்பட பலர் கலந்து கொண் டனர்.