திருப்பூர், அக்.28- அமராவதி உயிரியல் பூங்கா பராம ரிப்பு இல்லாமல் உள்ளதால், சமூக விரோ திகளின் கூடாரமாக, மது அருந்தும் இட மாக மாறியுள்ளது. மாவட்ட சுற்றுலாத் துறை உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து, மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியான உடுமலை வட்டாரம் சுற்றுலா மையமாக உள் ளது. இப்பகுதில் அமராவதி அணை, திருமூர்த்திமலை அணை, பஞ்சலிங்க அருவி, ஆனைமலை புலிகள் சரணால யம் ஆகிய சுற்றுலாத்தளங்கள் உள்ளன. இதில் அமராவதி சுற்றுலா மையத்தில் அமராவதி அணை மற்றும் பூங்கா, வனத்துறை முதலை பண்ணை, அமரா வதி மலைத்தொடர்கள், படகு சவாரி உள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையமாக இருந்தபோதும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுலாத்துறை, பொதுப்ப ணித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெயரளவிற்கு மட்டுமே சுற் றுலா மையமாக உள்ளது. ஒரு காலத் தில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகை யில் அணையின் கரைப்பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பசுமை யான பூங்கா அமைந்திருந்தது.
இங்கு பல செயற்கை நீரூற்றுக்கள், அழகான நடைபாதை, புற்கள், வண்ணமயமான செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன. அதேபோல் அணையின் எதிர்புறம் 2 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, அரிய வகை பற வைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங் குகள் தனித்தனி அறைகளிலும், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்கா வும் இருந்தன. மேலும் பூங்காவில் புலி, மான், காளை என சிலைகள் மற்றும் செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என ஏராளமான அம்சங்கள் சுற் றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்தன. சுற்றுலாப்பயணிகள் ஏராளமாக வந் தாலும் அணை பூங்காவை பராமரிப்ப தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அணை பூங்கா முட்புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற் படுத்தும் வகையில் உள்ளன. உயிரியல் பூங்கா முழுவதும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட் டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற் றின் உபகரணங்கள் உடைந்தும், மின் விளக்குகள் திருடப்பட்டும் சமூக விரோ திகளின் கூடாரமாகவும், மது அருந்தும் இடமாகவும் பூங்கா மாறியுள்ளது. அணை பூங்கா முழுவதும் அடர்ந்த வனப்பகுதி போல் மாறியுள்ளதால், பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிர மித்து சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள் ளது. அதேபோல் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என எந்த அடிப்படை வசதி களும் இல்லை. வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களும் மாயமாகியுள்ளது. அணை மற்றும் அணைப் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள், அணை பராமரிப்பு மற் றும் அடிப்படை வசதிகள் குறித்து கண்டு கொள்வதில்லை. அழகாக இருக்க வேண்டிய பூங்கா அலங்கோலமாக மாறியுள்ளதால் பல்வேறு மாவட்டங்க ளிலிருந்து வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் அவல நிலை உள் ளது.
எனவே அமராவதி அணை பூங் காவை முழுமையாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், சுற்றுலாப் பய ணிகள் வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடி நீர், கழிப்பிடம் என அனைத்து வசதி களையும் ஏற்படுத்த அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அணை பூங் காவை புதுப்பிக்க, பொதுப்பணித் துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் பல முறை திட்ட அறிக்கை கள் தயாரித்து அரசுக்கு நிதி கோரி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அணை பூங்கா அடையாளத்தை இழந்துள் ளது. தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த கள்ளி வகைகள் இருக்கும் வகையில், பாறை பூங்கா அமைக்கப்பட்டது. பல் வேறு வகையான மற்றும் வடிவங்களி லுள்ள கள்ளிச் செடிகள் இங்கு அமைக் கப்பட்டு பல வண்ண மலர்களுடன் அவற்றின் ரகங்கள், இயல்புகள் குறித்து அறிவிப்பு பலகைகள் என அழ காக காணப்பட்டது. சுற்றுலாப் பயணிக ளுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்த அறிவு வளர்க்கும் அம்சமாகவும் இருந் தது. தற்போது கள்ளிப்பூங்காவும் பரா மரிப்பின்றி, அடையாளத்தை இழந்து அடர்ந்த வனமாக மாறியுள்ளது. எனவே மாவட்ட சுற்றுலாத்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.