மே.பாளையம், ஜூலை 22- சிறுமுகை வனப்பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உருவா கவுள்ள வனவிலங்கு சிகிச்சை மற் றும் மறுவாழ்வு மைய பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள சிறு முகை வனச்சரகத்திற்குட்பட்ட அம் மன் புதூர் வனப்பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வனத் துறை சார்பில் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. காடுகளில் வாழும் வன உயிரினங் கள் காயமடையும் போது அவற்றை மீட்டு சிகிச்சை அளிக்க ஏதுவாக வனவிலங்குகள் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மையம் உருவாக்கப்பட உள்ளது. வன விலங்குகள் அடிபட்டாலோ, நோய் வாய்பட்டாலோ தற்போது வண்ட லூர் மற்றும் மைசூர் உள்ளிட்ட பகு திகளுக்கு மட்டுமே கொண்டு சென்று சிகிச்சையளிக்க முடியும். அதனால் ஏற்படும் சிக்கலை தவிர் கும் பொருட்டு தமிழகத்தில் மூன்று இடங்களில் வனவிலங்கு மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதி அம்மன் புதூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 130 ஏக் கர் சிறுமுகை வனப்பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக இப் பணிக்காக 6 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மையத் தில் கோவை மண்டலத்திற்குட் பட்ட பகுதிகளில் காயம் படும் வன விலங்குகள் மற்றும் நோய் வாய்படும் வன உயிரினங்கள் வனத்துறை மூலம் மீட்கப்பட்டு இங்கு அமைய உள்ள மையத்தில் சிகிச்சை அளிப்பதுடன் அவைக ளுக்கு மறுவாழ்வு அளித்து பராம ரிக்கப்படும்.
இம்மையத்தில் அதி நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவை அமைய உள்ளது. இந்நிலையில், இந்த மையத் தின் திட்ட பணிகள் துவங்க உள்ள நிலையில் அந்த இடத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந் திரன் மற்றும் வனத்துறை உயர் அதி காரிகள் நேரில் ஆய்வு மேற்கொண் டனர். இதன்பின் திட்டப்பணிகளை துவங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும், யானைகள் வனத்தை விட்டு வெளி யேறுவதை தடுக்க வனத்துறை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்க பட்டுள்ள ரயில் கள்ளி என்ற உயிர் வேலி அமைக்கபட்டுள்ள இடத்தை யும் அமைச்சர் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்க ளிடம் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறுகையில், சிறுமுகை பகுதியில் அமைய உள்ள வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, கால் நடை மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைய உள்ள தாகவும் தெரிவித்தார். மேலும், வேட்டை தடுப்பு காவலர் பணியில் 10 ஆண்டுக்கும் மேல் பணியாற்றி வருபவர்களை, நிரந்தர பணியா ளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கூறிய அவர், காலியாக உள்ள வனப்பணி யிடங்களை விரைவில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது, என்றார். முன்னதாக இந்த ஆய்வின் போது, முதன்மை வனப்பாதுகாவ லர் ராமசுப்ரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.