உதகை, ஜூலை 13- குன்னூர் அருகே மின்சா ரம் தாக்கி காட்டு யானை இறந்த நிலையில் தற்போது கரடியும் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கொலக்கம்பை அருகே உள்ள மூப்பர்காடு பகுதி யில் ஓலேண்டு தனியார் எஸ் டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை மற்றும் காட்டுப்பன்றி உள் ளிட்ட வன விலங்குகள் இறந்து கிடப்பதாக வும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மின்கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்தது. பழங்குடி யின கிராமமான மானார் முதல் மூப்பர் காலனி வரை செல்லும் தாழ்வான மின் கம்பியை தெரி யாமல் தொட்டதால் யானை மற்றும் பன்றி இறந்தது தெரியவந்தது. இரவு நேரம் ஆகி விட்டதால் எத்தனை வனவிலங்குகள் இறந் துள்ளன என்று வனத்துறையினரால் கணிக்க முடியவில்லை. இந்தநிலையில் செவ்வாயன்று காலை வனத்துறை கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சர வணகுமார், வனச்சரகர் செல்வகுமார், வன வர் திருமூர்த்தி, வனகாப்பாளகள் லோகேஷ், விக்ரம், வீரமணி மற்றும் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த னர். அப்போது கரடி ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது கரடியின் காலில் மின்கம்பி சுற்றிய நிலையில் இருந் தது. ஏற்கனவே மின்சாரம் நிறுத்தம் செய்யப் பட்டதால், காட்டு யானை காட்டுப்பன்றி மற் றும் கரடியின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவற்றின் உடல் உறுப்புகளை சேகரித்துக் கொண்ட னர். கரடியை தீ வைத்து எரித்த பின்னர் யானை மற்றும் காட்டுப்பன்றி அந்தப் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி வன விலங்குகள் இறந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.