districts

img

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்

கோவை, நவ.14- தீத்திபாளையம் பகுதிக ளுக்குள் நுழைந்த யானைக் கூட்டம் விளைநிலங்க ளையும், ரேஷன் கடையை யும் சேதப்படுத்தி சென்றுள் ளதால் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். கோவை மாவட்டம், தீத்திபாளையம் கிராமத் துக்குள் திங்களன்று இரவு  14க்கும் மேற்பட்ட காட்டுயானைகள்  புகுந்தது. பின்னர், அங்குள்ள வாழை மரங் கள், தென்னை மரங்கள் மற்றும் தக்கா ளிக்காக வைக்கப்பட்டுள்ள டிப்பர்களை  சேதப்படுத்தியது. இது குறித்து அப்பகுதி  மக்கள் உடனடியாக வனத்துறையின ருக்கு தெரிவிக்க, தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு  யானைகளை விரட்டினர். இதனிடையே அந்த காட்டு யானைகள் அங்குள்ள ரேஷன்  கடையையும் சேதப்படுத்தி சென்றது. அப்பகுதியில் இரண்டு மூன்று யானை கள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலை யில், திங்களன்று இரவு 14க்கும் மேற்பட்ட யானைகள் வந்து பெரும் அளவு சேதத்தை ஏற்படுத்தி உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  எனவே, வனத்துறை வருவாய்த்துறை ஆகியவை இணைந்து யானைகள் நடமாட் டத்தை கண்காணித்து யானைகளை அடர்  வனபகுதிக்குள் விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.