districts

விளைநிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகள்

கோவை, செப். 29- விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிர் களை சேதப்படுத்தும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுத்து விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வியாழனன்று விவசாயகிகள் குறைதீர்  கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை ஏற்றார்.  இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதி நிதிகள், விவசாயிகள் திரளானோர் பங்கேற் றனர்.

முன்னதாக, மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறை விற்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப் பட்டது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் பேசு கையில், கோவை மாவட்டத்தில் விவசாயி களினால் போதிய அளவு பயிர்களை சாகு படி செய்ய முடியவில்லை. பல்வேறு இடங் களில் விவசாய நிலங்களில் நீர் வரத்து இல் லாமல் பயிர்கள் காய்ந்துள்ளது. கோவை  மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக  அறிவிக்க வேண்டும் என்றும், விவசாய நிலங் களில் நுழைகின்ற வனவிலங்குகளை தடுக் கவும், மனித - விலங்குகள் மோதல்கள் ஏற் படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுகக வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு,  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப் பீட்டுத் தொகை, நிவாரணத் தொகை ஆகிய வற்றை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்தனர்.  இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கிராந்தி குமார் பாடி  பேசுகையில், விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கிசான் கார்டு அட்டைகளை தற்போது அனைத்து கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள், வேளாண்மை துறை ஆகிய வற்றில் புதிய விண்ணப்பங்கள் பதிவு செய் யப்படுகின்றன. எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக விண் ணப்பங்களை கொடுத்து கிசான் அட்டையை  பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், கோவை மாவட்ட வன  அலுவலர் ஜெயராஜ், மாவட்ட ஆட்சியரின் விவசாய துறை நேரடி உதவியாளர் சபி அகமத், வேளாண்மை துறை இணை இயக் குநர் முத்துலட்சுமி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.