districts

img

காட்டு யானை பலி

உதகை, அக்.12- முதுமலை புலிகள் காப்பகம் சிங்கார வன பகுதியில் 25 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானை இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணா லயம் 683 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வன  பகுதியாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட் டெருமை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் காணபடுகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் முது மலை புலிகள் காப்பகம் வெளிவட்ட பாதை என அறிவிக்கப் பட்டுள்ள பகுதியான சிங்கார வனச்சரகம் பகுதியில் வனத் துறையினர் ரோந்து பணி மேற்கொண்ட போது பெண் யானை  ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக முது மலை கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில்  இறந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் பிரேத பரி சோதனை செய்தனர். இதில் இறந்த யானைக்கு 25 வயது இருக்கும் எனவும், பெண் யானை கருவுருற்றிருப்பது கண்ட றியபட்டது. யானை எதனால்  இறந்தது குறித்து வனத்துறை யினர் விசாரணை செய்து வருகின்றனர்.