தருமபுரி, மார்ச் 17- தனியார்மயம் யுத்த உலகத்தையே உருவாக்கும். மாறாக, சோசலிசம் எங்கு அமைகிறதோ, அங்கு புதியதோர் உலகம் உருவாகும் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், கருத்தரங்கம் மற்றும் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் பணி நிறைவு பாராட்டு விழா தருமபுரி பெரியார் மன்றத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட் டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் வர வேற்றார். இதில் “நல்லதோர் வீணை செய் வோம்” என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆகியோர் கருத்துரையாற்றினர். இதையடுத்து பணி ஓய்வுபெற்ற ஏ.சேகருக்கு சங்கத்தின் சார் பில் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, “புதியதோர் உலகம் செய் வோம்” என்ற தலைப்பில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், சுதந் திரத்திற்கு பிறகு அரசு உதவிபெறும் கிறிஸ் தவ பள்ளிகளும், அரசு பள்ளிகள் மட்டுமே இருந்தது. அன்று எல்லோரும் அரசு பள்ளி யில் படித்தவர்கள். தற்போது தனியார் பள்ளி களின் ராஜ்யமாக உள்ளது. பணம் இருந்தால் தான் படிக்க முடியும் என்ற சூழல் உள்ளது. புதிய பொருளாதாரம், தனியார்மயம் ஆகி யவை புதியதோர் உலகத்தை உண்டாக் காது. கொடிய உலகத்தை உண்டாக்கும்; யுத்த உலகத்தை தான் படைக்கும். புதியதோர் உலகம் உருவாக்க வேண் டும் என்றால், மனிதநேயத்தின் மூலம் மட் டுமே சாத்தியம். முதலாளிகள் தன் சுயநலத் திற்காக ஏழைகளை ஏய்கின்றனர். ஏழை களின் உழைப்பை சுரண்டுகின்றனர். மூல தனக்குவியலால் மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. தனியார்மயம் நிரந்தர வரு வாயை அழித்து, நிரந்தரமற்ற வேலையை உருவாக்குகிறது. தற்போது உள்ள இந்திய பொருளாதாரத்தில் 20 சதவிகிதம் மக்கள் மட்டுமே பொருட்களை வாங்கும் சக்தியுள்ள வர்களாக உள்ளனர். இதில் மாற்றம் தேவை. புதியதோர் உலகம் என்பதன் பொருள் என்ன ? புதிய உலகத்தை படைக்க என்ன செய்வது? புரட்சியால் மட்டுமே புதியதோர் உலகத்தை அமைக்க முடியும். புதியதோர் உலகத்துக்கு எதிரான அமெரிக்கா நாடு கியூபா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது. பொருளாதார தடை என்பது யுத்தத்தை விட மோசமானது. பாலஸ்தீன மக் களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை நம் இந்தியா ஆதரிக்கிறது. பாஜகவிற்கு இனவெறி - மதவெறி கொள்கை மட்டும்தான் உள்ளது. நாடாளு மன்றத்தில் 146 நாடாளுமன்ற உறுப்பினர் களை இடைநீக்கம் செய்துவிட்டு, விவதாமே இல்லாமல் 17 சட்டங்களை நிறைவேற்றியுள் ளனர். ஊடகங்களை மிரட்டி தன்னுடைய ஊது குழலாக பயன்படுத்துகின்றனர். மதச்சார் பின்மைக்கு எதிரான ஆட்சியை அனுமதிக்கக் கூடாது. மதவாத, இனவாத அரசியலை வீழ்த்த வேண்டும். இந்த மாற்றம் இந்தியாவில் துவங்க வேண்டும். உலகம் முழுவதும் நடக்க வேண்டும். மாற்றம் ஏற்பட்டு சோசலிசம் எங்கு அமைகிறதோ அங்கு புதியதோர் உலகம் உரு வாகும், என்றார். இந்நிகழ்வில், சட்டமன்ற முன்னாள் உறுப் பினர் பி.டில்லிபாபு, சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன், அரசு ஊழியர் சங்க மாநி லப் பொருளாளர் பாஸ்கரன், மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், துணை பொதுச் செயலாளர்கள் ந.வெங்கடேசன், தெ. வாசுகி, மு.சீனிவாசன், மாநிலச் செயலாளர் கள் அண்ணா குபேரன், ச.ஹேமலதா, தமிழ் நாடு தலைமை செயலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கு.வெங்கடேசன், மாநில தணிக்கை யாளர் நடராஜன், ஜாக்டோ - ஜியோ நிர்வாகி கள் பி.எம்.கெளரன், ராசா.ஆனந்தன், புக ழேந்தி, பாஸ்கரன், எல்ஐசி மாதேஸ், பிஎஸ் என்எல் பி.கிருஷ்ணன், ஓய்வுபெற்றோர் அமைப்பின் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.