திருப்பூர், ஆக. 2 - திருப்பூர் மாநகராட்சியில் உள்ளடங்கி வரக்கூடிய சுற்றுச் சாலைகளில் பெரும்பா லான இடங்களில் மின் விளக்குகள் இல்லா மல் இருள் சூழ்ந்ததாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் கிடைக்காமல் விபத்தில் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்து டன் வாகன ஓட்டிகள் பயணிக்கும் நிலை உள் ளது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் நகராட்சியாக இருந்தபோது இதன் எல் லைக்கு வெளியே விரைவான போக்குவ ரத்து வசதிக்காக வெளி வட்ட சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. திருமுருகன் பூண்டி, செட்டிபாளையம், பூலுவபட்டி, நெருப்பெ ரிச்சல், கூலிபாளையம், நால்ரோடு, காசிபா ளையம், நல்லூர், கோயில் வழி, வீரபாண்டி, முருகம்பாளையம், பெரியாண்டிபாளை யம், அணைப்பாளையம், வேலம்பாளை யம், அம்மாபாளையம், திருமுருகன் பூண்டி என சுற்றேறக்குறைய 50 கிலோமீட்டர் தூரத் திற்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. பின்னலாடைத் தொழில் வளர்ச்சியின் வேகத்தில், திருப்பூர் நகரம், மாநகராட்சியாக விரிவடைந்த நிலையில், தற்போது இந்த சுற்றுச் சாலையின் ஆகப்பெரும்பாலான பகு திகள் மாநகரத்துக்கு உட்பட்டதாக மாறிவிட் டன. இந்த சுற்றுச்சாலையை மையப்படுத் தியே ஏராளமான புதிய குடியிருப்புகளும் உருவாகி லட்சக்கணக்கான மக்கள் வசிக் கக்கூடிய பகுதிகளாக மாறியுள்ளன. தொடக்கத்தில் இந்த சுற்றுச்சாலையில் இரவு நேரங்களில் போதிய விளக்குகள் இல்லை. இரவு நேரப் பயணம் ஆபத்தான தாக, அச்சுறுத்தலாக இருந்தது. கனரக வாகனங்கள் மட்டும் ஓரளவு சென்று வந்த நிலை இருந்தது. ஆனால் தற்போது மாநக ராட்சிக்கு உட்பட்டதாக ஏராளமான குடியிருப் புகள் அமைந்திருக்கும் நிலையில், இந்த சுற்றுச் சாலை தற்போது போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாக உள்ளது. அதேசம யம் இந்த சாலையில் இரவு நேரப் பயணத் துக்குப் போதிய விளக்குகள் இல்லை. அடர்த்தியாக மக்கள் குடியிருக்கும் பகுதி களில் மட்டும் தெரு விளக்குகள் இந்த சாலை யில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிக ளில் விளக்குகள் இல்லாமல் மாலை மங்கிய நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகி றது.
ஏற்கெனவே இந்த சாலையில் ஏராளமான வளைவுகளும், மேடு பள்ளங்களும் உள் ளன. அத்துடன் குடிநீர், பாதாளச் சாக்க டைப் பணிக்காக தோண்டப்பட்டு சாலை நெடுக பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகின்றன. முன்பு போக்குவரத்து நெரிசல் இல்லாத காலத்தில், இருசக்கர வாகனங்களில் வேகமாகப் போகக்கூடிய வர்கள் இந்த சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு, படுகாயம் அடைவது அதிகளவு நடந்துள்ளது. ஆனால் நகரமயம் ஆகிவிட்ட பிறகும் இந்த சாலையில் போதிய விளக்கு கள் இல்லாத நிலையில், சாலையும் படு மோசமாக இருப்பதால் விபத்துகள் தொடர் கதையாக உள்ளன. குறிப்பாக பி.என்.சாலையில் இருந்து பூலுவபட்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளை யம் வழியாக கூலிபாளையம் செல்லக்கூ டிய பகுதி, நல்லூர், கோயில்வழி மற்றும் பல் லடம் சாலையுடன் இணையும் வீரபாண்டி, இடுவம்பாளையம், முருகம்பாளையம், ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் மிக வும் மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளன. வாகனப் போக்குவரத்தும் மிகுந்து காணப் படுகிறது. பிரதானமாக நகரின் மையப்ப குதியில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளைப் போல் இந்த சுற்றுழச் சாலை பகுதியும் மாறியிருக்கிறது. ஆனால் அதற்கேற்ப தெரு விளக்குகள் இல்லை. சில இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தெரு விளக்குகளும், போதிய வெளிச்சம் தராத கிராமப்புறங்களில் அமைக்கப்படும் சோலார் விளக்குகளைப் போல் குறைந்த வெளிச்சம் தரக்கூடியவையாக உள்ளன. இந்த இடங்க ளிலும் எதிரே வரும் வாகனங்கள், ஆட்கள் நடமாட்டம் தெரிவதில்லை.
இந்த சுற்றுச்சாலையில் மாலை நேரத்துக் குப் பிறகு இருள் சூழ்ந்த நிலையில் நேரிட்ட விபத்துகளில் இறந்தவர்கள், காயம டைந்தவர்கள் பற்றிய தனியான விபரம் ஏதுமில்லை. இது மட்டுமின்றி வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவதும் கவனிக்கத்தக்கது. திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் கடந்த திங்களன்று நடைபெற்றது. இதில் வார் டுகளில் தெரு விளக்கு பிரச்சனை பற்றி பல் வேறு வார்டு கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி னர். ஏற்கெனவே இருக்கும் தெரு விளக்கு களை பழுது நீக்குவதில் இருக்கும் குறைபா டுகள் பற்றியும், அவரவர் வார்டுகளில் புதிய தெரு விளக்குகள் அமைப்பது பற்றியும் கூறி னர். இந்த சுற்றுச்சாலைகள் தற்போது மாந கராட்சியின் பல வார்டுகளுக்கு உட்பட்ட பகு தியாக இருப்பதால் அந்தந்த பகுதிக்கான கோரிக்கையாக கவுன்சிலர்கள் தெரு விளக்கு கோரிக்கையை தனித்தனியாக முன் வைத்தனர். ஆனால் மொத்த சுற்றுச்சாலையையும் தனி அலகாகக் கொண்டு, முழுவதும் மின் விளக்குகள் நிறுவும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ஒரு தனித் திட்டம் ஏற்படுத்தி செயல் படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த சுற் றுச்சாலை பகுதி முழுமையும் மின் விளக்கு வசதி பெற்றாலே மாநகரின் கணிசமான பகுதி வெளிச்சம் பெற்றதாக ஆகிவிடும். எனவே சுற்றுச்சாலைகள் வெளிச்சம் பெற மாநக ராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. (ந.நி.)