ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் தற்போது பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளார். குறிப்பாக வெட் கிரைன்டருக்கு அதிகரித்துள்ள ஜிஎஸ்டி வரி மற்றும் பம்ப்செட் ஆகிய வற்றிற்கான வரி உயர்வு வெட்கிரைண் டரின் தாயகமான கோவையில் சிறு, குறு தொழில்முனைவோரை கடும் கொதிப் புக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபோல பேனா, மை, பாக்கெட் செய்யப்பட்ட பால், தயிர், மோர், மாமி சம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களின் ஜிஎஸ்டி வரிவிகிதம் அதிகரிக்கப் பட்டுள்ளது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தீக்கதிர் நாளித ழுக்கு நமது நிருபர்கள் பேட்டி காண்கை யில்.. உதிர்த்த வார்த்தைகளை வாச கர்ளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
வாங்குகிறவனுக்கும் கஷ்டம் விற்கிறவனுக்கும் கஷ்டம் - ராமசந்திரன்
வரி போட்டாத்தான் அரசாங்கத்த நடத்த முடியும் என்கிறத நாங்க புரிஞ்சு தான் இருக்கிறோம். ஆனா இவங்க ஆடம்பர பொருட்களுக்கு வரிய ஏத் துனா பரவாயில்லை, அத்தியாவசி பொருட்களுக்கு இப்படி அதிகமா ஜிஎஸ்டி போட்ட எப்படி. இதுனால எல் லாத்துக்கும் கஷ்டம்தான், உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு ஏத் துறது ரொம்ப தப்பு சார்…வாங்குகிற வனுக்கும் கஷ்டம், விற்கிறவர்களுக் கும் கஷ்டம்தான்,
மனநலமே பாதித்துள்ளது - ரவி
மோடி அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால் அனைத்தும் பாதித்த்துள் ளது. மனநலமே பாதித்துள்ளது என் றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவங்க னால எல்லாத்துக்கும் சிரம்தான், இப்ப தொழிலே நடத்த முடியாதுங்கிறேன். நீங்க லாபத்த பத்தி பேசுரீங்க…..500 ரூபா கிடைச்ச இடத்தில 200 ரூபா தேறமாட் டீங்கிது.
லாபத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் - கார்த்திகேயன்
நம்ம தொழில் ஏற்கனவே சுத்தமாக இல்லை. படுத்துக்கிடக்கு. 12 சதவிகிதம் கட்ட முடியாதுன்னுதான் போராடிட்டு இருக்கிறோம். இப்போ மேலும் 6 சத விகிதம் உயர்த்தினா எப்படி பொழப்பை பார்ப்பது. நான் அரசியல் பேசவில்லை. எந்த அரசும் மக்கள் நல்லா இருக்னும் னுதான் ஆட்சி நடத்துவாங்க. இவங்க (மோடி) வந்ததற்கப்புறம் எல்லாம் தலை கீழாக மாறிடுச்சு. எங்களுக்கு தொழில் நடத்த வேண்டும், இரண்டு பேருக்கு வேலை கொடுத்து சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் அது இப்போது முடியாமல் போயிருச்சு. நாங்க அர சாங்கத்துகிட்ட என்ன கேட்கிறோம் என் றால் நாங்கள் தொழில் நடத்துகிறோம். அதில் வருகிற லாபத்தை எல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு நீங்கள் வசூலிக்கிற ஜிஎஸ் டியை மட்டும் கொடுத்தால் போதும்.
கந்துவட்டி வாங்குகிறவனுக்கு ஜெயில். அதவிட மோசமா வசூலிக்கிற இவங்களுக்கு செல்வம் - ஜோசப்
என்னங்க அநியாயமா இருக்கு, கார், பிளைட்டுன்னு பணக்காரங்க வாங் குற பொருளுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைத்துவிட்டு, நடுத்தர மக்கள் பயன்படுத்துகிற பால், தயிர், லைட், பேனா, பென்சில், மை, மாமிசம் எல் லாத்துக்கும் ஜிஎஸ்டி வரிய உயர்த்தி ருக்காங்க. இவங்க யாருக்கு அரசாங்கம் நடத்துகிறாங்கன்னே தெரியலைங்க. இருக்கிறவன்கிட்ட பிடுங்கி இல்லாத வன்கிட்ட கொடுன்னு சொல்லுற காலம் போய், இப்போ இல்லாதவன்கிட்ட ஒட்ட சுரண்டி இருக்கிறவங்ககிட்ட கொடுக்குறாங்க. இங்க வெட்கிரைன் டர், பம்ப்செட் தொழிலே முடிஞ்சு போச் சுங்க. இதை சரி பன்ன வழியிருக்கான்னு பார்க்குறதவிட்டுவிட்டு திங்குற சோத் துல மண் அள்ளிப்போடுறது பத்தா துன்னு மொத்த சிறுகுறு தொழிலையும் முடிச்சு கட்ட பார்க்கிறாங்க. வியாபாரம் பன்னுனா பத்தோ, இரு பதோ கிடைக்குன்னுதான் வியாபாரம் பன்னுறோம். இப்போ பத்து ரூபாயுக்கு வியாபாரம் பன்னிட்டு இருபதுரூபா ஜிஎஸ்டி கட்டுனும்னா, அதுக்கு இந்த தொழில் எதுக்கு விட்டுப்போட்டு அக் கடான்னு வீட்டுல ஒக்காந்துக்க வேண் டியதுதான். இந்த வரி உயர்வை யாருமே ஏத்துக்க முடியாது. கேட்ட அந்த சித்தா ராமன் (ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்) ரோடு போடுறோம், ரேசன் கடையில அரிசி போடுறோம், அத பன் னுறோம், இதப்பன்னுறோம்ங்கிறார். இந்த கிரைன்டர், பம்ப்செட் தொழி லுக்கு இவர் என்ன பன்னியிருக்கிறார். ஒரு துரும்பக்கூட கிள்ளிப்போட வில்லை. மக்களை வாட்டி வதைக்கா தீங்க. கோடிக்கணக்கில் சம்பதிப்பவ னுக்கு ஜிஎஸ்டி போடுங்க. எங்களை போட்டு ஏன் இப்படி அவதிப்பட வைக்கி றங்கீற. கந்துவட்டி கொடுக்கிறவனுக்கு ஜெயில்லுன்னு சட்டம்போட்டு உள்ள தள்ளுரீங்க. சட்டம் போடுற நீங்களே அதவிட மோசமா பிடுங்குனா உங்கள எதுல போடுறது. கேஸ் விலை ஏறிப் போச்சு, இப்ப விறகும் வாங்க முடியாது. இப்படியே தொழில் மொத்தமாக முடங் கிப்போச்சுன்னா திருட்டு, கொள்ளை குற்றங்கள் அதிகமாகும். எப்படியாவது வாழனும்னுமில்லைங்களா. அப்போ வன்முறை அதிகமாகும். அதை அரசே தூண்டிவிடுதேன்னு கவலையா இருக்கு. ரூ.2500 விற்ற கிரைன்டர் விலை இப்போ ரூ500 ஜிஎஸ்டியோட 3 ஆயி ரம் உயர்ந்தால் யாரும் புதுசா கிரைண்டர் வாங்க மாட்டார்கள். பழய கிரைண் டரை ரிப்பேர் பன்னி சமாளிச்சுங்களாம் னுதான் நினைப்பாங்க. அப்போ இங்க என்ன தொழில் வாழும். இத எதிர்த் போராட்டம்னு ஒன்று வந்தா எல்லா ரும் கலந்துக்கோனும். உலகத்துல எங்கையெல்லாம் போராட்டம் நடக்குது மக்கள் ஆட்சியே மாத்துறத டிவியில, பேப்பர்ல பாக்குறோம். இங்கேயும் அந்த மாதிரி நடக்குனும்ங்க. ரேடியோவில மோடி பேசுறப்ப ஏழைகளுக்கு அதப்பன்னுறோம், இதப்பன்னுறோம்ன்னு சொல்லுறார். ஆனால் உண்மையில் எதயும் செய்ய வில்லை. இல்லாதவன்கிட்ட பிடுங்கிற வேலையத்தான் செய்கிறார். இந்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில விடியவிடிய தொழில் நடக்கும் ஆளுக அங்கிட்டும் இங்கிட்டும் போய்கிட்டே இருப்பாங்க இப்ப பாருங்க பகல் நேரத் திலே கூட ஒரு காக்கா குஞ்சுகூட காணோம். இதுதான் எதாரத்தமான உண்மை.
ஒரு சட்டை இரண்டு வருசத்திற்கு போட்டுக்கிற நிலைதான் - ரவி
நான் கைவண்டியில பழம் விற்கி றேன். ஒரு நாளைக்கு 300 ரூபா கிடைக்கி றதே அதிசியமாப்போச்சு. இவங்கு எல் லாத்துக்கும் ஜிஎஸ்டி வரி போட்டா எப் படி பொழைக்கிறது. நாங்க ஒரு சட்டைய வாங்கினா ஒரு வருசத்துக்கு அதவே போட்டுக்குவோம். இப்ப அதயே இரண்டு வருசத்துக்கு போட்டுக் கோன்னு அரசாங்கம் சொல்லாம சொல் லுது.