districts

img

அஞ்சல் துறையின் மேற்கு மண்டல விருது வழங்கும் விழா

கோவை, ஏப்.19-  இந்திய அஞ்சல் துறையின் சார் பில், மேற்கு மண்டல அளவிலான  விருது வழங்கும் விழா கோவையில் புதனன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் நான்கு மண்டலங்களில் ஒன்றாகவும், 12 வருவாய் மாவட்டங்களை ஒருங்கி ணைத்து மேற்கு மண்டலம் செயல் படுகிறது. இவ்விழாவில், அஞ்சல் வணிகம், அஞ்சல் சிறு சேமிப்பு, அஞ்சல்  ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் வணிக  மேம்பாட்டு சேவை ஆகிய பிரிவு களிள் சிறப்பாக பணியாற்றிய  சாதனையாளர்களை கௌர விப்பதற்காக 22 பிரிவுகளில் விருது கள் வழங்கப்பட்டன. இதில், அஞ்சல் துறை தலைவர்  ஜே.சாருகேசி பங்கேற்று விருது களை வழங்கி கௌரவித்தார். இந் நிகழ்வில், மேற்கு  மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமிதா அயோத்தியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.