நாமக்கல், ஆக.19- உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, சனியன்று நாமக் கல் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினர். உலகம் முழுவதும் சனியன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இதனிடையே நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு பகுதியில் உள்ள புகைப்பட கலைஞர்கள் இணைந்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு உடைகள் பால், ரொட்டி, ஆகிய வற்றை வழங்கினர். மேலும், ஆதவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கியும், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்கள். இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.