நாமக்கல், ஜூலை 27- பழங்குடியினர் அனைவருக்கும் நலவாரிய அட்டை வழங்கி சட்ட சலு கைகளை வழங்கிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட மலைவாழ் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 3 ஆவது மாநாடு கொல்லிமலை செம் மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலை வர் வி.கே.வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை கே.வி.ராஜ் ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் தங்க ராஜ் முன்மொழிந்தார். ஒன்றிய தலை வர் எஸ்.கே.மாணிக்கம் வரவேற் புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் சடையப்பன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.சின்னசாமி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் பன்னீர்செல்வம் வரவு செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தீர்மானம்
இதில், கொல்லிமலை அரசு மருத் துவமனையை உயிர் காக்கும் நவீன வசதிகளுடன் கூடியதாக தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண் டும். 2006 வன உரிமை சட்டத்தை முழு மையாக அமல்படுத்தி, மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வன நிலங் களில் ஆடு,மாடு மேய்ப்பதற்கு எதி ரான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொல்லிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்க ளுக்கு குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, பள்ளி கட்டிடம், கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம், தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தர வேண் டும். மலைவாழ் மக்களின் சாதிச் சான் றிதழ்களை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். மலை முழுவதும் உள்ள ரீ சர்வேவில் உள்ள குளறுபடி களை சரி செய்ய வேண்டும். பழங் குடியினர் அனைவருக்கும் நலவா ரிய அட்டை வழங்கி சலுகைகளை அமல்படுத்த வேண்டும். தம்மம்பட்டி முதல் வேலிக்காடு வரை பேருந்து போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். மலையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம நிர் வாக அலுவலர்கள் கிராமத்திலேயே தங்கி மக்களுக்கு பணியாற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் மாவட்ட தலைவராக எஸ்.தங்கராஜ், மாவட்ட செயலாள ராக கே.சின்னசாமி, மாவட்ட பொரு ளாளராக சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஏ.பழ னிச்சாமி, இ.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர்களாக வி.கே.வெள்ளைச்சாமி, எஸ்.கே. மாணிக்கம் உட்பட 27 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. மாநாட்டை நிறைவு செய்து மாநில பொருளாளர் ஏ.பொன்னு சாமி உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.