districts

img

நாட்டை காப்போம் கலைக்குழுவிற்கு அக்.4ல் வரவேற்பு

தருமபுரி, செப்.23- ஓசூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் நாட்டை காப்போம் கலைக் குழுவிற்கு அக்.4 ஆம் தேதியன்று தரும புரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட  உள்ளது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங் கிணைப்புக்குழு கூட்டம் தருமபுரியில்  நடைபெற்றது. மக்கள் கண்காணிப் பகம் ஒருங்கிணைப்பாளர் கே.பி. செந்தில் ராஜா தலைமை வகித்தார்.  நாட்டைக் காப்போம் ஒருங்கிணைப் புக்குழு சார்பில் செந்தமிழ்ச்செல்வி, வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில், அரசியல் சாச னத்தில் உள்ள மதச்சார்பின்மைக் கோட் பாட்டை உயர்த்திப் பிடிக்கும் வகை யில் 'நாட்டைக் காப்போம்'  குழுவின்  சார்பில் அக்.2 முதல் 17 ஆம் தேதி  வரை தமிழ்நாடு முழுவதும் ஆறு முனை களில் இருந்து கலைப்பயணக் குழுக்கள் புறப்பட்டு மதுரையில் சங்க மிக்க உள்ளன. அதன்படி ஓசூரிலிருந்து புறப்படும்  கலைக்குழு அக்.4 ஆம் தேதியன்று  தருமபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளது. இக்குழுவிற்கு பாலக்கோடு, காரிமங்கலம், பெரி யாம்பட்டி, தருமபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர் ஆகிய இடங்களில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்படும். மேலும், அக்.2 ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள மகாத்மா  காந்தி சிலைக்கு மாலை அணிவித்து  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெறும். இந்நிகழ்வில் அனைவரும் பங் கேற்க வைக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் மக்கள்  ஒற்றுமை மேடை சார்பில் இரா.சிசு பாலன், மனிதநேய மக்கள் கட்சியின்  மாவட்டத் தலைவர் சுபேதார், அருட் தந்தை யூஜின், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செய லாளர் சிராஜுதீன், தேசிய லீக் மாவட்டத்  தலைவர் சிக்கந்தர், சிறுபான்மை மக்கள் நலக்குழு பொறுப்பாளர் எஸ்.கிரைஸாமேரி, தமுஎகச மாவட்டச் செய லாளர் ம.சிங்காரவேல் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.