தாராபுரம், அக்.9- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலைக்குழுவினருக்கு தாராபுரம் மற்றும் அவிநாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தமிழகத்தின் எட்டு முனைக ளில் இருந்து கலைக்குழு சார்பில் பிரச் சாரம் மேற்கொண்டு மதுரையில் சங்க மிக்க உள்ளது. அதன் ஒருபகுதியாக தாராபுரம் வந்தடைந்த கலைக்குழுவின ருக்கு சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, பெரி யாரிய அமைப்புகள் மற்றும் முற் போக்கு அமைப்புகள் சார்பில் சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் னர் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாராபு ரம் கிளை தலைவர் என்.கனகராஜ் தலைமை வகித்தார். கலைநிகழ்ச்சிக ளின் போது ஒன்றிய பாஜக அரசு இந்திய நாட்டின் அரசியலைப்பு சட்டத்தை தகர்க்கவும், மக்களிடையே மத மோதலை உருவாக்கவும், பிற்போக்கு சக்திகள் கடந்த சில காலமாக பெருமு யற்சி எடுத்து வருகின்றன.வெறுப்பு ணர்வை தூண்டிவிட்டு மக்களை பதட்ட நிலையிலேயே வைக்க விரும் புகின்றன. வருமானவரித்துறை, அம லாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை அரசின் துறைகளிலிருந்து ஆளும் கட்சியின் கைப்பாவைகளாக மாறிவருவது குறித்தும் வருகின்ற பாரா ளுமன்ற தேர்தலில் மோடி தலைமையி லான அரசை தூக்கி எறிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தாரை தப்பட்டை முழங்க கலை நிகழ்ச்சி களோடு பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் மற்றும் காங்கி ரஸ், விசிக, பெரியாரிய, முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல அவினாசி புதிய பேருந்து நிலையம் வந்தடைந்த பயண குழுவிற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அவிநாசி கிளை சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது. இதில் மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒன்றிய நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.