திருப்பூர் புத்தகத் திருவிழா 20ஆவது ஆண்டாக தற்போது நடத்தி முடிக்கப்பட்டி ருக்கிறது. எவ்வளவுதான் நல்ல நிகழ்ச்சி யாக,, அறிவுச் சமூகத்தைப் படைக்கும் அற்புத நிகழ்வாக நடத்தப்பட்டாலும், இதையும் சீர்குலைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சில சக்திகள் செயல் பட்டு வருகின்றன. 20 ஆண்டு காலம் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில் திருப்பூரின் தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள், சமூக நோக்கில் செயல்ப டும் பண்பாளர்கள், சூழலியல் ஆர்வலர் கள் என பல தரப்பினரும் கைகோர்த் துப் பயணித்து வருகின்றனர். திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் முன் கை எடுத்த இந்த தேர் வடத்தை அனைவரும் கரம் கோர்த்து ஊர் கூடித் தேர் இழுத்து வரு கின்றனர். அழகாக இந்த தேர் பயணித்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக தமி ழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்த விழாவைச் சிறப்பாக நடத்த ஒத்துழைத்து வருகின்றனர். ஆனால் வாசிப்பு, சிந்தனை, உரையாடல் என்ற இந்த ஆரோக்கியமானப் பண்பாட்டு நிகழ்வு நிலைபெற்று வளர்ந்து வருவது மதவெறிக் கூட்டத்துக்கு எரிச்சலை ஏற்ப டுத்தி வருகிறது. எனவே எப்படியாவது இதைச் சீர்கு லைக்க வேண்டும் என்று இழிவான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே சில ஆண்டு களுக்கு முன்பு மாணவர் கலை இலக் கியத் திறனாய்வு போட்டிகளை அரசுப் பள்ளிகளில் நடத்தக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து சீர்குலைக்க முயன் றனர். அதையும் மீறி அந்த ஆண்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. இது போல் கடந்த ஆண்டு புத்தகத் திருவிழா நடத்துவதற்கு இடம் தேர்வு செய்யும் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் நஞ் சப்பா மேல்நிலைப் பள்ளியை முன்மொ ழிந்தது. அரசு நிர்வாகம் பரிந்துரைத்த இவ்விசயத்திலும் சம்பந்தமே இல்லாமல் கம்யூனிஸ்ட் வெறுப்புப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டனர். இப்படி புத்தகத் திருவிழா நடைபெறும் சமயங்களில் உண் மையில்லாத, ஏதாவது ஒரு விசயத்தைத் தூண்டி விட்டு குழப்பம் விளைவிக்க எப் போதும் முயற்சித்து வருகின்றனர். அதை யெல்லாம் முறியடித்துத்தான் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி “பெண்மொழி எனும் புதிய சூரியன்” என்ற தலைப்பில் பேசினார். அவர் என்ன பேசுகிறார் என்பதையே முழுமையாக கேட்கத் தயாராக இல்லாத ஒரு கும்பல் திடீரென்று எழுந்து தேசியம், தெய்வீகம் பற்றி பேசக் கூடாது என்று கூக்குரல் எழுப்பியது. எனினும் ஆண்டாள் பிரிய தர்ஷினி, தெய்வீகம், தேசியம் என்பதும் எங்கள் உரிமை என்று பதிலடி கொடுத் தார். எப்படியாவது ஏதாவது குழப்பம் விளைவிக்க மாட்டோமா என்று இந்துத் துவ மதவெறி கும்பல் ஒன்று அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. எனினும் மிகப் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற புத்தகத் திருவிழா இந்த சலசலப் புகளைப் புறந்தள்ளி சிறப்பாக நடந்தேறி யது.
புத்தகத் திருவிழா தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே உடன் பயணித்து வருவோருக்குத் தெரியும்; திருப்பூர் பின் னல் புக் டிரஸ்ட் எவ்வித ஒரு சார்புத் தன்மையும் இல்லாமல் வெளிப்படையாக நடந்து வருவதை நன்றாக அறிவார்கள். இதே புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தக விற்பனயாளர்களும் பங்கு பெற்று வருகின்றனர். வலதுசாரி, இடதுசாரி, திராவிடம், இந்துத்துவம், இஸ்லாமிய மார்க்கம், ஆன்மிகம், நாத் திகம் மற்றும் பல்வேறு மத நூல்கள் என்று எல்லாவித சிந்தனைப் போக்கு களைக் கொண்ட புத்தகங்களையும் விற் பனை செய்வதற்கு எந்த தடையும் இல் லாமல் அனுமதித்தே வருகின்றனர். இன் னும் சொல்லப் போனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஜயபாரதம் அரங்கமும் புத்தகக் கண்காட்சியில் கடந்த காலங் களிலும் இடம் பெற்று வந்தது. இப் போதும் இடம் பெற்றது. அதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. எல்லாவித புத் தகங்களையும் விற்கலாம், பார்வையாளர்கள் அவர்களுக்கு விருப்ப மான எந்த புத்தகத்தையும் வாங்கலாம், தங்களுக்கு விருப்பமான கருத்தியலை அவர்களே தேர்ந்தெடுத்து படித்துத் தெரிந்து கொள்ளட்டும் என்ற விரிவான ஜனநாயக உணர்வுடன் தான் பின்னல் புக் டிரஸ்ட் நடந்து கொள்கிறது. இதனால் தான் தடம் புரளாமல், வெவ்வேறு சிந்த னையோட்டம் கொண்டவர்களும் கூட பின்னல் புக் டிரஸ்டுடன் கைகோர்த்து இணைந்து பயணித்து வருகின்றனர். அதேபோல் புத்தகத் திருவிழா மாலை நேர கருத்தரங்குகளிலும், பலவித கருத்தி யலைக் கொண்டவர்களும் வந்து உரை யாற்றிச் சென்றுள்ளனர். சுகி.சிவம் போன்ற ஆன்மிகப் பேச்சாளர்களும் இந்த மேடையை அலங்கரித்துள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் சிந்தித்து சீர் தூக்கிப் பார்க்கும் துணிவு இல்லா தவர்களாக, வெறுப்புப் பார்வை கண்ணை மறைக்கும் வகையில் மதவெறி ஆர்எஸ்எஸ் கும்பல் செயல்படுகிறது. இந்த கண்காட்சியில் கூட, மற்ற புத்தக நிறுவனங்கள் தங்கள் புத்தக விற்பனை யில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இந்த கும்பல் அயோத்தி ராமர் கோயில் படத்தை அங்கு வந்த பார்வையாளர் களிடம் திணித்துக் கொண்டிருந்தனர். இதுதான் இந்த கும்பலின் வெட்கம் கெட்டத்தனம். எவ்வித ஒழுங்கு முறைக்கும் இவர்கள் கட்டுப்படமாட்டார்க ளாம், ஆனால் மற்றவர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் பிரச்சாரம் நடத்துகிறார்கள் என்று நேர்மையற்ற முறையில் குற்றம் சாட்டுகின்றனர். இதுதான் இந்த பாசிச கூட்டத்தின் குணம். ஆனால் திருப்பூர் மக்கள் இந்த கண் காட்சி எப்போதும் போல சிறப்பாக நடக்க வேண்டும் என்று இதயபூர்வமாக விரும்புகின்றனர். நல்ல பயிர்களுக்கு இடையே முளைத்த களைகளைப் போல, நல்ல புத்தக கண்காட்சி நிகழ்வுகளுக்கும் இடையே இந்த விஷமிகள் சில துடுக்குத் தனங்களைச் செய்தபோதும் அவர்களது குழப்பங்களுக்கு இடம் தராமல் அமைதி காத்து கவனமுடன் கடந்து சென்றனர். புத்தகத் திருவிழா நிறைவடைந்தபோது,, “எக்காரணம் கொண்டும் புத்தகத் திரு விழாவை விட்டுவிடாதீர்கள், தொடர்ந்து நடத்துங்கள்” என்ற முகம் தெரியாத பல ரது வேண்டுகோள்கள், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மீது மக்கள் வைத்திருக்கும் மிகப்பெரும் நம்பிக்கையை வெளிச்சமிட் டுக் காட்டியது. இது மக்களின் பண்பாட் டுத் திருவிழா, மக்களின் ஆதரவோடு களைகள் கலைந்தெறியப்படும்; தொடர்ந்து உறுதியோடு புத்தகத் திரு விழா நடைபெறும். (ந.நி.,)