districts

img

“நுகர்வோர் பூங்கா” என்ற இணைய இதழ் தொடக்க விழா

நாமக்கல், ஜன.3- “நுகர்வோர் பூங்கா” என்ற இணைய இதழ் தொடக்க விழா நடை பெற்றது. இதில் ஏராளமான வழக்க றிஞர்களும், பொதுமக்களும் பங் கேற்றனர்.  நாமக்கல்லில் தனியார் மண்டபத் தில் நுகர்வோர் பூங்கா என்ற இணைய இதழ் தொடக்க விழா திங்களன்று அமைதிக்கான உத்திகள் அமைப் பின் இயக்குனர் கே.பி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.தங்கராஜ் விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக் கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் இணைத் தலைவர் என். மாரப்பன், நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலை வர் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் கௌரவச் செயலாளர் அய்யாவு, நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் நாமக்கல் மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் டி.மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை ஏதாவது ஒரு வகையில் நுகர் வோராக இருப்பதால், நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த நுகர் வோர் பூங்கா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ரெப்கோ ஹோம்  பைனான்ஸ் தலைவர் சி.தங்கராஜ்  விழாவில் கேட்டுக்கொண்டார். நுகர் வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும்  நுகர்வோர் தொடர்புடைய அனைத்து  சட்டங்களுக்கும் சிறப்பு பயிற்சி  வகுப்புகளை இளம் வழக்கறிஞர் களுக்கு கூட்டமைப்பு நடத்த திட்டம் உள்ளது என்று விழாவில் பேசிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் இணைத் தலைவர் என்.மாரப்பன் தெரிவித்தார். விழா வில் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ராஜவேலு, வழக்கறிஞர் சத்திய மூர்த்தி, குமரேசன் உள்ளிட்ட வழக் கறிஞர்களும் பொதுமக்கள் என பல ரும் கலந்து கொண்டனர்.