districts

img

அடக்குமுறையின் மூலம் ஆட்சி நடத்திய பாஜகவை விரட்டியடிப்போம் - ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

சேலம், ஏப்.12- அடக்குமுறையின் மூலம் ஆட்சி நடத்திய பாஜகவை விரட்டி யடிப்போம் என கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் மக்களி டையே வாக்கு சேகரித்து உரை யாற்றினார்.  கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார் பில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் மலையரசனை ஆதரித்து, ராணிப்பேட்டை திடலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  தேர்தல் பொதுக்கூட்டம் நடை பெற்றது. சிபிஎம் ஆத்தூர் தாலு காச் செயலாளர் ஏ.முருகேசன் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கின் மூலம் தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக செய்த பெரிய ஊழலை அம்பலமாகியுள்ளது. சிபிஐ, அம லாக்கத்துறை, வருமான வரித்து றைகளை, தங்களுக்கு நிதி தராத நிறுவனங்கள் மீது ஏவி ஊழலை சட்டம் போட்டு கொள்ளையடித்த கூட்டமாய் பாஜக உள்ளது. மோடி  தலைமையிலான ஒன்றிய பாஜக வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி யில், பசி, பஞ்சம், பட்டினி சாவுகள்,  வேலையின்மை, கல்வி மறுப்பு,  வீதியில் விவசாயிகள் அடக்கு முறை, மதவெறி சட்டங்கள் அம லாக்கம், பாலியல் படுகொலைகள்  நடந்துள்ளது. நாட்டின் செல்வங் களை அழிக்கும் பணியை பாஜக செய்கிறது. மாநில உரிமைகளை பறித்து நாட்டு மக்களின் வாழ்வா தாரத்தை சீர்கேடாக்கிய மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூ டாது.

அப்படி ஆட்சிக்கு வந்தால் நாடே கேள்விக்குறியாக மாறும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரத்தையும் மோடி அரசு செய்து தரவில்லை. நாட்டு மக்களி டையே பிரிவினையை ஏற்படுத் தும் பணியை முக்கிய பிரதான பணி யாக மேற்கொள்ளும் பாஜகவி னர், சிறுபான்மை மக்கள் மீது  தொடர் தாக்குதல்களை நடத்தி வரு கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதி ரான சட்டங்களை கொண்டு வர அதி முக முக்கிய பங்களிப்பை செலுத் தியது. நாட்டு மக்களுக்கு பயனில் லாத குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் சட்டம், மின்சார சட்டங் கள் மூலம் இன்று சிறுபான்மையி னர், விவசாயிகள், தொழில் துறை யினர் என அனைத்து தரப்பு மக்க ளும் பாதிப்பை சந்தித்து வருகின்ற னர். தொழிலாளர் நல சட்டங்களை  திருத்தியதன் விளைவாக, சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. எனவே, வரும் நாடாளுமன்ற தேர் தலில் இந்தியா கூட்டணி வேட்பா ளர்களுக்கு வாக்களிக்க வேண் டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா, கிழக்கு மாவட்ட காங்கி ரஸ் செயலாளர் எஸ்.கே.அர்த்த னாரி, சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஜி.கணபதி, விசிக கிழக்கு மாவட் டச் செயலாளர் மு.கருப்பையா, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தா.வானவில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஜாகீர் உசேன், திமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மணி, மதிமுக கிழக்கு மாவட்டச் செய லாளர் கோபால் சிபிஎம் தாலுகாச் செயலாளர்கள் கே.காளிதாஸ், ஏ. பாக்கியராஜ், பி.தமிழ்மணி உட் பட பலர் கலந்து கொண்டனர்.