districts

img

ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்திற்கு  அஞ்சமாட்டோம் : பாலகோபால்

திருவனந்தபுரம், பிப். 21 - கடன் வரம்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக ஒன்றிய அரசு தங்களை மிரட்டிப் பார்ப்பதாகவும், இது சர்வாதிகாரப் போக்கு என்றும் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.  கேரள மாநிலத்தின் உற்பத்தியை பொறுத்து அம்மாநிலத்தின் பொதுக்கடன் வாங்கும் வரம்பை 3.5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக ஒன்றிய அரசு குறைத்தது. இதனை எதிர்த்து கேரள அரசு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு, நிதி விவகாரத்தில் திட்டமிட்டு வஞ்சிப்ப தாகவும் குற்றம் சாட்டியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  கேரள அரசும் - ஒன்றிய அரசும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு அரசுகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.  இதனிடையே இந்த வழக்கு செவ்வா யன்று (பிப்ரவரி 20) விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு தாக்கல் செய்த வழக்கை, வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரி வித்தது. இதற்கு கேரள அரசு ஒப்புக் கொள்ள வில்லை.  இந்நிலையில், கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால், புதனன்று செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கடன் வரம்பு விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடியதற்காக ஒன்றிய அரசு கேரளத்தை மிரட்டிப் பார்க்கிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறிய தாவது: “வழக்கை வாபஸ் பெற்றால், 13 ஆயிரம் கோடி ரூபாயை கடன் தொகையாக வாங்க உடனடியாக அனுமதி தருவதாக ஒன்றிய அரசு கூறுகிறது; வழக்கு போட்டா லும், போடாவிட்டாலும் வழக்கமாக அனு மதிக்கப்பட வேண்டிய தொகைதான் இது. அதனைத் தருவதற்கு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு மிரட்டுகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது அரசியல் சாசன உரிமை. அது எப்படி தவறாக இருக்க முடி யும்? உரிய பங்கை மாநிலங்களுக்கு தந்தாக வேண்டும் என்பது இப்போது ஒன் றிய அரசுக்கு தெளிவாகிறது அல்லவா?  மேலும் இவ்வாறான நிதியை கேரளம் மட்டும் கோரவில்லை. 14 மற்றும் 15-ஆவது நிதி கமிஷன்களின் கீழ் நிலுவை யில் உள்ள தொகைகள் உச்சநீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் செல்வதற்கு முன்பு, பல வழிகளில் ஒன்றிய அரசின் கவனத்திற்கு முறைப்படி கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் அனுமதிக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் அலட்சியத்தை கண்டித்து தில்லியில் கேரளம் மட்டுமல்ல, கர்நாடகமும் போராட்டம் நடத்தியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதாகக் கூறி, பணம் தராமல் ஒன்றிய அரசு மிரட்டுகிறது. மாநிலத்துக்கு உரிய பங்கை ஒதுக்கா மல் நிதி ரீதியாக நசுக்கும் ஒன்றிய அர சின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரப் போக்காகும். அரசியல் சாசனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவதால் கடன் தொகையைப் பெறும் வரை கேரள அரசு வழக்கை வாபஸ் பெறாது. நிதியாண்டின் இறுதியான மார்ச் மாதத்தில் பணம் விடுவிக்கப்படாவிட்டால், கேரளம் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.” இவ்வாறு கே.என். பாலகோபால் தெரிவித்துள்ளார்.