உடுமலை, ஜூலை 27 - வேலையின்மை அதிகரித்துக் கொண்டி ருக்கும் நிலையில், வேலை என்பது வெறும் கூலி பெறுவதற்கல்ல, சமூகப் பாதுகாப்பு டன் கூடிய வேலை வேண்டும் என்ற முழக்கத் துடன் திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக் கான இயக்கம் (மெஸ்) சார்பில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது. எங்கே எனது வேலை?, எங்கே எனது சமூக பாதுகாப்பு? என்ற முழக் கட்த்துடன் நடைபெற உள்ள இந்த மாநாடு விளக்கப் பிரச்சாரம் அனைத்து மாவட்டங் களிலும் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதி யாக, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பேட்டை உழவர் சந்தை அருகே வியாழ னன்று தொடங்கியது. சிஐடியு தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் இந்த பிரச் சார இயக்கத்தைத் துவக்கி வைத்துப் பேசி னார். இந்த பிரச்சாரத்தில் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புடன் வேலை என்பதை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயி ரத்தை உறுதிப்படுத்த வேண்டும். வேலை யில்லா கால நிவாரணத்தை உயர்த்த வேண் டும். நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் 200 வேலை நாட்களாக உயர்ந்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற முறையை அனைத்து வேலைகளுக்கும் நடைமுறைப்ப டுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது.
முன்னதாக உடுமலையில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செய லாளரும், மெஸ் துணை அமைப்பாளருமான பிரவீன் தலைமை ஏற்றார். மெஸ் அமைப்பா ளரும், மாதர் சங்க மாவட்டத் தலைவருமான எஸ்.பவித்ராதேவி, துணை அமைப்பாள ரும், வாலிபர் சங்க மாவட்ட தலைவருமான எஸ்.அருள், சிஐடியு நிர்வாகி கே.காமராஜ், மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத், நிர்வாகி கள் உடுமலை ஜெகதீசன், விஸ்வநாதன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதணன், செயலாளர் ஆர்.குமார், பால தண்டபாணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி, சித்ரா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செய லாளர் பா.ராஜேஸ், பிஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி கல்யாணராமன், சக்திவேல் ஓய்வூதியர் சங்கத்தின் செல்லதுரை, தாசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.
பின்னர் பிரச்சார பயணத்திற்கு குடிமங்க லம் நால் ரோட்டில் விவசாய சங்கத்தின் தலை வர் சுந்தர்ராஜ் தலைமையில் வரவேற்பளிக்கப் பட்டது. இதில் மாதர் சங்கத்தின் சசி கலா, ராஜாத்தி விவசாய சங்கத்தின் மகேந் திரன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தம்பு ராஜ், ஆறுமுகம், முருகவேல் உள்ளிட்ட திர ளனோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்ட பொருளார் ஜி.சம்பத் சிறப்புரை ஆற் றினார். இதன்பின் பிரச்சாரக்குழு பல்லடம் பேருந்து நிலையம் சென்றது. அங்கிருந்து அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் வர வேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரக்குழு சார் பில் பா.ராஜேஸ் பேசினார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் முத்துசாமி, அவிநாசி பொது தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரமூர்த்தி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மோகன சுந்தரம், கட்டிட கட்டுமான தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் ராஜன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வி, உட்பட பலர் கலந்து கொண்டனர்., ஊத்துக்குளி டவுன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாற் றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜெயபால், திருப்பூர் குமரன் நினைவகத் தின் முன்பு பி.ஆர்.கணேசன், சி.மூர்த்தி உள் ளிட்டோர் உரையாற்றினர். இப்பிரச்சாரம் அனுப்பர்பாளையத்தில் நிறைவடைந்தது. இங்கு அமைப்பாளர் எஸ். பவித்ராதேவி தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் பேசினார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் நிறைவு செய்து வைத்துப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட பெருந் திரளானர் கலந்து கொண்டனர்.