பாலகிருஷ்ணன் பேச்சு தருமபுரி, பிப்.12- தரவுகளால் வரலாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்றும், பழங்குடியின மக்களிடமி ருந்து வரலாற்று உண்மைகளை கற்றுள் ளோம் என்றும் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். தகடூர் அதியமான் வரலாற்று பேரவை, தகடூர் புத்தகப் பேரவை மற்றும் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வரலாறு துறை இணைந்து “ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை” என்ற நூல் ஆய்வு கருத்த ரங்கம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இக்கருத் தரங்கிற்கு தகடூர் புத்தகப் பேரவை தலை வர் இரா.செந்தில் தலைமை வகித்தார். தொல்லியல் இயக்குநர் (ஓய்வு) தீ.சுப்பிர மணியன் நோக்கவுரையாற்றினார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில நிர்வாகி ச.தமிழ்செல்வன், தென் மண்டல கோவில் ஆய்வுத் திட்ட தொல்லி யல் கண்காணிப்பாளர் கி.அமர்நாத் ராம கிருஷ்ணா, முத்தையா நூலக ஆராய்ச்சி இயக்குநர் சுந்தர் கணேசன், சென்னை கிறிஸ்த் துவக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜெ.சுடர்விழி ஆகியோர் கருத்துரையாற்றி னர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒடிசா மாநில முதல்வர் அலுவ லக தலைமை ஆலோசகரும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் பேசுகையில், மனித குல வரலாறு என்பது பயணங்களால் கட்டமைக் கப்படுகிறது. பயணங்களுக்கு வெளியில் வர லாறு என்ற ஒன்று இல்லை. மனித வரலாறு என்பது பயணங்களின் கூட்டுத்தொகை. தரவு களால் வரலாறு கட்டமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கட்டுக்கதைகளால் வர லாறு கட்டமைக்கப்படும். தரவுகளால் கட்ட மைக்கப்படும் வரலாறு முடிவு பெறாமல் தொடர்ந்து பல்வேறு தேடல்களை தேடிக் கொண்டே இருக்கும். பழங்குடி மக்களிடமி ருந்து பல்வேறு தகவல்களை அறிந்து வருகி றோம். அவர்களிடமிருந்து வரலாற்று உண் மைகளை நாம் கற்றுள்ளோம். வரலாறு தேடல் களின் காரணமாகத்தான் இன்று கீழடி அகழ் வாராய்ச்சி குறித்து நாம் அறிய முடிந்தது, என் றார். இக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர் கள், எழுத்தாளர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். முடிவில், தரு மபுரி அரசு கல்லூரி வரலாறு துறை பேராசிரி யர் சி.சந்திரசேகர் நன்றி கூறினார்.