நாமக்கல், ஜூலை 23- விடுதலைப் போராட்ட வீரர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் வி.ராமசாமியின் 23 ஆவது நினைவு தினம் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல், எலச்சிபாளையம் ஒன்றியம், மோளிபள்ளி கிராமத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் கொடியேற்றி, அவரது திருவுரு வப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மோளிப்பள்ளி கிளை செய லாளர் ஆர்.குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுரேஷ், எலச்சி பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் வெங்கடாசலம், படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோன்று திருச்செங்கோடு ஒன்றி யம் சித்தாலந்தூர், பள்ளிப்பாளையம், காவேரி ஆர்எஸ், பள்ளிபாளையம் ஆவா ரங்காடு, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செம்பாம்பாளையம், நல்லிப்பாளையம், சின்ன எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தோழர் வி.ஆர்.நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி, விச,விதொச, சிஐ டியு உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர் கள், ஊழியர்கள் திரளானோர் பங்கேற்ற னர்.