districts

img

மோடி தலைமையிலான பாஜக அரசு இனியும் எங்களை ஏமாற்ற முடியாது!

மோடி அரசின் கார்ப்ரேட் ஆத ரவுக்கொள்கையின் கார ணமாக விலைவாசி உயர் வும், வேலையிண்மையும் இந்திய மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. 2014 மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பாஜக தங்களது வாக்குறுதியாக ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்றும், விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உற்பத்தி விலையை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக வழங்கப்படும். கள்ளப் பணத்தை, கருப்பு பணத்தை மீட்டு ஒவ் வொரு வங்கிக்கணக்கிலும் ரூ 15 லட்சம் வழங்கப்படும் போன்ற விதவிதமான வாக் குறுதிகளை கொடுத்தனர்.  ரூ.15 லட்சத்தில், பதினைந்து ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தா லும், வேலையின்மையால் அவதிப்படுகிற இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், வேலையில் இருப் போரையும் கார்ப்ரேட் ஆதரவுக்கொள்கை யின் காரணமாக வீட்டுக்கு அனுப்பிவைத்த அவலம்தான் நாடு முழுவதும் உள்ளது. ஒரு  பொதுத்துறை நிறுவனங்களைக்கூட இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மோடி உருவாக்க வில்லை என்பதும், இருக்கிற பொதுத்துறை களை விற்பதற்கென்றே தனி அமைச்சகத்தை அமைத்த கேவலம் மோடி அரசுக்கு உண்டு. இந்திய நாட்டின் பொருளாதாரத்தை பாது காத்து வரும் எல்ஐசி, வங்கி உள்ளிட்ட பொதுத்துறைகளையே சீரழிக்கும் நட வடிக்கையே மோடியின் இந்த 9  ஆண்டு கால ஆட்சியின் துயரமாக இருக்கிறது. விவசாயிக ளுக்கு இரண்டு மடங்கு விலை என்றவர், விவசாயிகளுக்கு விரோத மான சட்டங்களை போட்டு தலைநகர் தில்லி யில் கடும் குளிர், கடும் வெயில் என விவசாயி களை ஆண்டுக்கணக்கில் போராட வைத்த அர சாக மோடி அரசு இருந்தது. பதுக்கல்காரர் களின் கள்ளக்கூட்டின் காரணமாக இந்திய வர லாற்றில் தக்காளி, வெங்காயத்தை ரேசன் கடைகளில் வாங்கவைத்த அவலம் மோடி ஆட்சியிலேயே நடைபெற்றது. 

மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை யால் விழிபிதுங்கிக்கிடக்கும் மக்கள் கிளர்ந் தெழக்கூடாது என்பதற்காகவே, வகுப்புவாத நடவடிக்கையை தூண்டிவிட்டு பிரச்சனை களை மடைமாற்றும் வேலையை பாஜகவின் சங்பரிவாரங்கள் மேற்கொண்டு வருகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற  காரணங்களால் திக்கற்று, திசையற்று தவிக் கும் மக்களின் நிலை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சி நாடு முழுவம் பெரும் போராட்டத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளது. இதன்தொடர்ச்சியாக தமிழகத்தில் செப்டம்பர் 7 ஆம்தேதி ஒன்றிய அரசை கண்டித்து, ரயில் மறியல் போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அறைகூவல் விடுத்துள்ளது.  இதன்ஒரு பகுதியாக போராட்டத்தின் அவசியம் குறித்து செப்டம்பர் 1 முதல் 7 வரை மார்க்சிஸ்ட் கட்சி யினர் மாநிலம் முழுவதும் எழுச்சி பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், கனன்று கொதிநிலையில் இருக்கும் மக்களின் மனநிலையை ஆற்றுப் படுத்துவதற்காக மோடி அரசு எரிவாயு உரு ளையின் விலையை ரூ.200யை குறைத்துள் ளது. சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக் கிற தந்திரம், சூழ்ச்சி என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். இனி ஒருபோதும் எங்களை ஏமாற்ற முடியாது என்பதை வெளிப்படையாக பேசு கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண் ணையின் விலை சரிவை சந்தித்தபோது, சமை யல் எரிவாயு விலை குறைக்கப்படவில்லை. கடந்த 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்த போது ரூ417 ஆக இருந்த சிலிண்டர் விலை படிப்படி யாக உயர்ந்து 1118 ஆக உயர்த்தியது மோடி  அரசு. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. இருந்தபோதும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், 5  மாநில தேர்தலை மனதில் வைத்தும், நாடாளு மன்ற தேர்தல் நெருங்குவதால் சமையல் எரி வாயு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு குறைந் துள்ளதாக பொதுமக்கள்  குற்றஞ்சாட்டியுள்ள னர்.

2014 -2023 வரை கேஸ் விலை உயர்வும், கச்சா எண்ணை விலையும்.

கடந்த 2014-ம் ஆண்டு 93.17 டாலர் இருந்த கச்சா எண்ணெய் விலை இருக்கும் போது சிலிண்டர் விலை ரூ 410.50 மட்டுமே. ஆனால் தற்போது 75.73 டாலர் மட்டுமே. 2014-ம்  ஆண்டை விட 18 டாலர் குறைவாக உள்ளது. அப்படி கணக்கிட்டால் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ 450க்கும் குறை வாக விற்பனை செய்ய வேண்டும். மோடி அரசு தற்போது 1118 ரூபாய்க்கு விற்பனை செய் கிறது. இதில் 200 ரூபாய் குறைக்கப்படும் என கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் செயலே. ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற 2014- மே  24 முதல் இன்றுவரை பெட்ரோல் கேஸ், டீசல்  பொருட்களுக்கு விதித்த கலால் வரி மட்டும் சுமார் 32 லட்சம் கோடி என ஆய்வறிக்கை கூறுகிறது. அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி நடைமுறையில் வரி போடும் ஒன் றிய அரசு பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என கூறுவது மக்களை மயான குழிக்குள் தள்ளுவதன் ஒருபடியாகவே பார்க்க வேண்டியுள்ளது என மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

ஏ.ராமமூர்த்தி, சங்ககிரி

நாடு முழுவதும் வீட்டு உப யோகத்துக்கான சமையல் எரி வாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன் றிய பாஜக அரசு அறிவித்துள் ளது. ஐந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மன தில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதா யம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளனர். எந்த வித விவாதமும் இல்லாமல் 3 வேளாண் சட்டங் களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து, ஓராண்டு காலம் போராடிய விவசாயி களை சந்தித்து குறைகளைக் கேட்க முன்வராத கொடூரமான ஆட்சியை நடத்திய பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற் றார். அதைப் போலத் தான் இப்போதும் விலைக் குறைப்பு நாடகத்தை நடத்துகிறது என்றார். 

எஸ்.தீனதயாளன், சேலம்

கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சர்வ தேச சந்தையில் கச்சா எண் ணெய் விலை குறைந்தபோது பெட்ரோலியப் பொருட்களின்  விலையை பாஜக அரசு குறைக்க வில்லை. மாறாக, கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கலால் வரியாக 32 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்து கஜானாவை நிரப்பிக் கொண்டுள்ளது. பெருமுதலாளிக்கு ஆதரவா கவே மோடி அரசு செயல்படுகிறது. தனியார் முத லாளிகளின் நிறுவனங்கள் அபார வளர்ச்சி  அடைந்துள்ளது. தேசியமயாமாக்கப்பட்ட வங்கி கள் மூலம் 14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி  அவர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி கடன் 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாய் வராக்கடனாக மாறியுள்ளது.  கடனை திருப்பி வழங்காததால் மக் கள் மீது சுமையை ஏற்றி கடுமையான பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசு. கேஸ் விலை  குறைப்பு என்பது யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பதற்கு சமமானது.   

எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு

2014 ஆம் ஆண்டு, மே மாதத் தில் கலால் வரி ஒரு லிட்டர் பெட் ரோலுக்கு ரூபாய் 9.48 ஆக இருந் தது. தற்போது, ரூபாய் 19.90 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, டீசல் மீது ரூபாய் 3.56 ஆக இருந்தது, தற்போது 15.80 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்புவதுதான் பாஜக வின் நோக்கமாக இருந்தது. அந்த அடிப்படை யில் தான் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2014 இல் 400 ஆக இருந்தது, பாஜக ஆட்சி யில் 9 ஆண்டுகளில் 1118.50 ஆக கடுமையாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.200 குறைத்தி ருப்பது மக்களை ஏமாற்றம் செயல். எரிவாயு  விலையை குறைத்த தாக கூறும் மோடி அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியது ஏன்?  மோடி அரசாங்கம் மக்களுக்கானது அல்ல.

-சேலம், எழில்