தாராபுரம், டிச. 3- தாராபுரம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனையாக விற்பனை செய்து வரும் நபர் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் அடுத்த சின்னக்கம்பா ளையம் பேரூராட்சி பகுதியில் நீர் நிலை வழிப்பாதையை ஆக்கிர மித்து, தனிநபர் ரியல் எஸ்டேட்டாக மாற்றி வீட்டுமனை விற்பனை செய்து வருவதை தடுத்து நிறுத்தி நீர்வழிப்பா தையை மீட்டு ஆக் கிரமிப்பு செய்த நபர் மீது உரிய நட வடிக்கை எடுக்க கோரி விவசாயி கள் கோட்டாட்சியர் குமரேசனிடம் புகார் மனு கொடுத் துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதா வது, சின்னக்கம்பாளையம் கிராமத் தில் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிரா மத்தில் இருந்து மழை நீர் நேராக வடக்கே சின்னக்கம்பாளையம் கிராமம் சர்வே எண் 171 மற்றும் 182 நீர்வழி பாதை வழியாக சின்னபுத்தூர் கிராம எல்லைக் குட்பட்ட பஞ்சப்பட்டியில் உள்ள சின் னக்கரை ஓடையில் கலந்து வருகிறது.
தற்சமயம் அந்த வழியாக செல்லும் ஓடையில் நீர்வழிப் பாதையை ஆக்கிர மித்து திருப்பூர் பகுதியை சேர்ந்த ஒரு வர் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட நிலத்தை சமன் செய்து கிராவல் மண் கொட்டி நீர்வழிப் பாதையை அடைத் துள்ளார். இதன் காரணமாக நீர் வழிப்பா தையில் செல்லும் தண்ணீர் தடைபட்டு தற்போது விவசாய நிலங்களில் தண் ணீர் புகுந்து பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந் துள்ளன. அதிலும் வயல் வழிகளில் தேங்கியுள்ள தண்ணீரால் விவசாயிக ளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டு வருகி றது. எனவே நீர்வழிபாதையை தடுத் துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். புகார் மனுவை பெற்றுக் கொண்டு கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.