districts

img

20 நாட்களுக்கு மேல் தண்ணீர் விநியோகம் தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், பிப்.6- 43 ஆம் வார்டுக்கு உட்பட்ட கரு வம்பாளையம் பகுதியில் 20 நாட்க ளுக்கு மேல் குடிநீர் விநியோகம் இல்லா ததால் அப்பகுதி மக்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், 43 ஆம் வார்டுக்கு உட்பட்ட கரு வம்பாளையம் பகுதியில் கடந்த மாதம்  குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப் பட்டது. இதனால், 2 வீதிகளுக்கு 20 நாட் களுக்கும் மேல் குடிநீர் தடைப்பட்டுள் ளது. மேலும், பல இடங்களில் குடிநீர்  குழாய் உடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து வார்டு கவுன் சிலரிடம் புகார் அளித்தும் எந்த நட வடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் மிகுந்த  சிரமத்திற்குள்ளாகிறோம். மறுபுறம் தண்ணீர் சாலையில் வீணாக ஓடுகிறது.  உடனடியாக எங்கள் பகுதியில் குடிநீர்  விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடத் தப்பட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் கே.ஜமுனா உள்ளிட்ட காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைய டுத்து குழாய் உடைந்து தண்ணீர் வீணா கும் இடங்களையும் பார்வையிட்டு பொதுமக்கள் பிரச்சனை தீர நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.