திருப்பூர், மார்ச் 22- திருப்பூர் மாநகராட்சி பகு தியில் குடிநீர் பற்றாக்கு றையை போக்க அப்பர் பவானி அணை பகுதியில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார்கிரியப்பனவர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட் சிக்கு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் இருந்து, நான்காவது குடிநீர் திட்டத்தின் மூலமாக நீரேற்றம் செய்து, குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகை யில் தற்போது கோடை காலம் தொடங்கும் நிலையில் பில்லூர் அணையில் இருந்து நீர்வ ரத்து குறைந்துள்ளது. எனவே நான்காவது குடிநீர் திட்டத்திற்கு நீரேற்றம் செய்வது குறைந்துள்ளது. வரக்கூடிய மாதங்கள் கோடைகாலமாக இருப்பதால் குடிநீர் பற் றாக்குறை இன்னும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே முன்னேற்பாடாக, மேட்டுப் பாளையம் ஆற்றுப்படுகை பகுதிக்கு கூடு தல் நீர் வரத்து கிடைக்கும் வகையில், அப்பர் பவானி அணைப்பகுதியில் உள்ள நீர் அளவு குறித்து வியாழக்கிழமை திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த அணையின் நீர் அளவு உள்ளிட்ட விபரங்க ளையும் தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட் டறிந்தார். அதேபோல் கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரனும், இரு மாநகராட்சிகளை சேர்ந்த பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களும்இதில் கலந்து கொண்டனர்.