திருப்பூர், ஜூலை 25 - நொய்யல் ஆற்றில் இருந்து அணைப்பாளையம் குளத் திற்கு தண்ணீர் செல்லக்கூடிய பகுதியில் ஏற்பட்டிருக்கும் கரை உடைப்பை சரி செய்து தரும்படி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊத்துக் குளி வட்டம் அணைப்பாளையம் ஆயக்கட்டு பாசன விவசாயி கள் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் அணைப்பாளை யம் கிராமத்தில், நொய்யல் ஆற்றில் தடுப்பணை மூலம் 3 கிலோ மீட்டர் நீள ராஜ வாய்க்கால் வழியாக அணைப்பாளையம் குளத்திற்கு மழைக் காலங்களில் நன்னீர் கொண்டு செல்லப்ப டுகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் ஜூலை 15ஆம் தேதி முதல் குளத்திற்கு தண்ணீர் விடப்பட்டது. ஆனால் கடந்த 19ஆம் தேதி அன்று கரை உடைப்பு ஏற்பட்டு குளத்திற்கு தண்ணீர் விடுவது தடைப்பட்டது. தற்போதைய நிலையில் குளத்தில் 20 சதவிகிதம் மட்டுமே நீர் நிரம்பியுள் ளது. இனி வரும் மழைக் காலத்தில் தொடர்ச்சியாக வரக்கூ டிய நன்னீரை இந்த குளத்திற்கு கொண்டு வர ஏதுவாக அணைப்பாளையத்தில் கரை உடைப்பை சரி செய்ய வேண் டும் என்று ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கேட்டுக் கொண்ட னர்.