districts

img

பள்ளியில் குளம் போல் தேங்கிய கழிவு நீர்

கோவை, டிச.13- கோவை பேரூர் அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புகுந்த கழிவு நீரால் மாணவர்கள் அவதி யடைந்தனர். கோவை மாவட்டம், பேரூர் அருகே சீரநாயக்கன் பாளையத்தில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு  சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவி கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில். பள்ளியின் பின்புறம் ஓடும் சாக்கடை கால் வாய் சரி வர தூர்வாரப்படாதால், சாதாரண  மழைக்கே சாக்கடை கால்வாய் அடைத்து பள்ளிக்குள் கழிவுநீர் புகுந்து, குளம் போல் தேங்குகிறது. இதனால் பாம்பு போன்ற விஷ  பூச்சிகள் உள்ளே புகுந்து விடுவது மட்டு மின்றி, துர்நாற்றம் வீசி மாணவர்கள் கல்வி  கற்க முடியாத சூழல் உருவாகிறது. மேலும்,  பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற உடல்நிலை பாதிப்புக ளும் ஏற்படுகிறது. இதுகுறித்து, அப்ப குதி மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறை யிட்டும், கண்டு கொள்ளவில்லை.  எனவே,  உடனடியாக பள்ளிக்குள் கழிவுநீர் புகாத வாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விரைந்து சரி செய்து, நிரந்திரமாக தண்ணீர் போகாத வாறு நடவடிக்கை எடுக்கிறோம் என அதி காரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவ ரும் கலைந்து சென்றனர்.