கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண். 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஹவுசிங்யூனிட் பகுதியில், மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிரபாகரன், சனிக்கிழமையன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது குடியிருப்பு வாசிகளிடம் குப்பை களை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத் தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.