districts

img

மலை கிராமங்களில் வார்டுசபை கூட்டம்

திருப்பூர், நவ. 1 - திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், தளி  பேரூராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் செட்டில்மெண்ட்  பகுதிகளில் ஏரியா சபை கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. தளி பேரூராட்சி 16 ஆவது வார்டு குருமலை செட்டில் மென்ட் பகுதியில் காலை 11மணி அளவில் 16ஆவது வார்டு  பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோ.செல்வன் தலைமையில் ஏரியா சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 80க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களின் குறைகளை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் 17 ஆவது வார்டு திருமூர்த்திமலை செட்டில் மென்ட் பகுதியில் காலை 11 மணி அளவில் வார்டு உறுப்பினர்  வாணீஸ்வரி தலைமையில் சபா கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 70 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  மக்களின் குறைகளை கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.