ஈரோடு, ஏப்.25- அந்தியூர் நகரில் வசிக்கும் மக்க ளுக்கு பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் மந்தை மாரியம்மன் கோயில் வீதி வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி, கடந்த 25 ஆண்டு களாக போராடி வருகின்றனர். இது வரை அவர்களுக்கு முழுமையாக பட்டா வழங்கப்படவில்லை. எனவே, இக்குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு கள் சார்பில் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் தலைமையில், குழந் தைகளுடன் பாய், தலையணை, ஸ்டவ் அடுப்பு, தண்ணீர் குடம், பாத்திரங்களுடன் மக்கள் மந்தை மாரியம்மன் கோயில் பகுதி கோரிக்கை முழக்கமிட்டு பேரணி யாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதர் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கீதாசேகர் போராட்டத்திற்கு தலைமை ஏற் றார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர் பி.பி.பழனிச்சாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.விஜய ராகவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.லலிதா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி. மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி, விதொச தாலுகா தலைவர் ஜி.செங்கோடன் ஆகியோர் உரையாற்றினர். இந்த காத்திருப்பு போராட் டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் களை அழைத்து அந்தியூர் வட் டாட்சியர், காவல் ஆய்வாளர் முன் னிலையில் பேச்சுவார்த்தை நடத் தினார். அதில், மந்தை மாரியம்மன் கோயில் வீதி பட்டா முன்மொழிவு கோப்புகளை கோபிசெட்டிபா ளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப் பது என்று கூறப்பட்டது. இத்தக வலை தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை போராட்டத் தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித் தார். இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள் ளப்பட்டது. இறுதியாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா தலைவர் ஏ.முருகன் நன்றி கூறி னார்.