திருப்பூர், பிப்.21 - கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந் தும், மருத்துவ குடியிருப்புகளில் சில மருத்து வர்கள் குடிவந்தும் இன்னும் இஎஸ்ஐ மருத்து வமனைத் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படா தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி யின் வருகைக்காக காத்திருக்கிறதா, திருப் பூர் இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு விழா என்ற கேள்வியை அப்பகுதி பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். திருப்பூர் தொழிலாளர்களின் கால் நூற் றாண்டு கால கோரிக்கையான இஎஸ்ஐ மருத் துவமனை கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இப்போது முழுமை யாக பணிகள் நிறைவடைந்துள்ளது. திருப் பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக உள்ள பின்னலாடைத் தொழில் மற்றும் இதன் சார்புத் தொழில்களையும் நம்பி 8 லட்சம் தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலி ருந்தும் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். ஆண்டுதோறும் கோடிக்க ணக்கில் இஎஸ்ஐ சந்தா தொகை திருப்பூர் மாவட்டத்தில் வசூலாகிறது. எனினும் நீண்ட காலமாக இங்கு இஎஸ்ஐ மருத்துவமனை இல்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் தொழி லாளர்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத் துவமனை அமைக்க வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், உற்பத்தியா ளர்கள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக சிஐடியு சங்கம் மாவட்ட மாநாடுகளில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி தில்லியில் உள்ள இஎஸ்ஐ கழ கத்திற்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிக ளுக்கும் தொடர்ந்து கடிதம் அனுப்பியதுடன், தொழிலாளர்களை திரட்டி இயக்கமும் நடத்தி யது. 2004 முதல் 2006 வரை சந்திரசேகர ராவ் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை அமைச்சராக இருந்தபோது திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று திருப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார். ஆனால், மருத்துவ மனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்ப டாத நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மருத்துவமனை கட்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருப்பூர் பூலுவப்பட்டி பூண்டி சுற்றுச் சாலை யில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட இந்து அறநிலையத் துறையிடமிருந்து, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சுற்றுச்சுவர் மட்டும் கட்டப் பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக மருத்து வமனை கட்டும் பணி கிடப்பில் போடப்பட் டது. கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவ மனை அமைக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்ப டும் என ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர் மோடி, இ. எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு பெரு மாநல்லூர் பகுதிக்கு வந்து அடிக்கல் நாட்டி னார். ஆனாலும் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்குவது தாமதம் ஆனது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.81.34 கோடி மதிப் பில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கும் வரும் என்று தெரி விக்கப்பட்டது. தற்பொழுது கட்டுமானப் பணி கள் முழுவதும் முடிந்துள்ளது. மருத்துவ குடி யிருப்புகளில் மருத்துவர்கள் சிலர் குடியே றிவிட்டனர். இருந்தும் மருத்துவமனை திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாமல் உள் ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் தெரி விக்கையில், இப்பகுதியில் இஎஸ்ஐ மருத்து வமனை விரைவில் திறக்கப்படும் என்று நாங் களும் 2019 ஆண்டு முதல் காத்து கிடக்கின் றோம். எப்போது திறக்கப்படும் என்று தான் தெரியவில்லை. தற்பொழுது பணிகள் முழு மையாக முடிந்துள்ளதாக தான் தெரிகிறது. இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் சென்று விட்டனர். இங்கு அருகாமையில் உள்ள கடை களுக்கு வந்து செல்லும் தொழிலாளர்களை இப்போது பார்க்க முடியவில்லை. மருத்து வர்கள் சிலர் குடி வந்துவிட்டார்கள். அருகா மையில் உள்ள அங்காடிகளுக்கு வந்து தின சரி பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவிற்கான எந்த முன்னெடுப்புகளும் நடைபெறுவது போல் தெரியவில்லை. ஒரு வேலை மோடி வந்து திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக மருத் துவமனை திறப்பு விழா நடத்தப்படாமல் உள் ளதோ என்ற சந்தேகமாக உள்ளது என்ற னர்.