நாமக்கல், ஜூலை 11- வீட்டுமனை நிலம் கேட்டு ராசிபுரம் அருகே உள்ள கூலி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, சிங்களாந்தபுரம், அனப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீடுகளில் கடந்த 20 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். தினசரி கூலி வேலை செய்து வரும் நாங்கள் வாடகை கட்டணம் செலுத்த மிகுந்த சிரப்பட்டு வருகிறோம். எனவே, அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை நிலம் எங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனர்.