districts

img

விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தர வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.18- காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வரும் கூலிக்கு நெசவுச் செய்யும் விசைத்தறியாளர்க ளுக்கு, ஜவுளி வியாபாரிகளிடம் இருந்து, அறிவிக்கப்பட்ட கூலி உயர்வைப் பெற்றுத் தர அரசை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மங்கலம் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பாக செவ் வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.வேலுச்சாமி தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவருமான கே.கணேசன், திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்,  சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐ டியு மாநிலத்  துணைத் தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.