districts

கோவை: பேரூராட்சிகளில் வாக்கு சதவிகிதம் அதிகம்

பொள்ளாச்சி, பிப்.20- தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில்  மாநகராட்சி, நகராட்சியை விட பேரூராட்சி களில் அதிக வாக்குகள் பதிவானது. தமிழகத்தில் சனியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி களில் அதிகமாக வாக்குகள் பதிவாகின. அதன் படி கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை,  கிணத்துக்கடவு தாலுகாவிற்குட் பட்ட பேரூராட்சிகளான சமத்தூர், சூளேஸ்வரன் பட்டி, ஒடையகுளம், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், ஜமீன் ஊத்துக்குளி, கிணத்துக்கடவு, பெரிய நெகமம், ஒத்தகால் மண்டபம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் அதிகப் படியான வாக்குகள் பதிவாகின.

சமத்தூர்

சமத்தூர் பேரூராட்சியில் மொத்த வாக் காளர்களின் எண்ணிக்கை 5,677. இதில், ஆண்கள்: 2701, பெண்கள்: 2,976.

பதிவான வாக்குகள்: 

ஆண்கள்:2,102, பெண்கள்: 2,284, மொத்தம்: 4,386 வாக்குகள். சதவிகிதம்: 77% 

சூளேஸ்வரன்பட்டி

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,504. இதில், ஆண்கள்: 9,468, பெண்கள்: 10,035, மூன்றாம் பாலினத்தனவர்கள்:1 

பதிவான வாக்குகள்

ஆண்கள்: 6,396, பெண்கள்: 6,789, மூன்றாம் பாலினத்தவர்கள்: 0, மொத்தம்:9,851 வாக்கு கள். சதவிகிதம் 76%

ஒடையகுளம்

ஒடைகுளம் பேரூராட்சியில் மொத்த வாக் காளர்களின் எண்ணிக்கை 11,735. இதில், ஆண்கள்: 5,534, பெண்கள்: 6,201.

பதிவான வாக்குகள்:

ஆண்கள்: 4,309, பெண்கள்: 4,803. மொத் தம்: 9,112 வாக்குகள். சதவிகிதம்:78%

கோட்டூர்

கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு களில் மொத்தமாக 23,852 வாக்காளர்கள் உள் ளனர். இதில், ஆண்கள்: 11,252, பெண்கள்: 12,597, மூன்றாம் பாலினத்தவர்கள்:3

பதிவான வாக்குகள்:
ஆண்கள்: 8,327, பெண்கள்: 9,092, மூன்றாம் பாலினத்தவர்கள்:0. மொத்தம்: 17,419 வாக்குகள். சதவிகிதம்: 73%

ஆனைமலை

ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டுளில் மொத்தம் 18,071 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்: 8,435, பெண்கள்: 9,628,மூன்றாம் பாலினத்தவர்கள்:8
 

பதிவான வாக்குகள்:
ஆண்கள்: 5.902, பெண்கள்: 6,578, மூன்றாம்பாலினத்தவர்கள்:1. மொத்தம்: 12,481 வாக்குகள். சதவிகிதம்: 69%
 

வேட்டைக்காரன் புதூர்
வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சியில் மொத்தம் 17,173 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்: 8,082, பெண்கள்: 9,091.
பதிவான வாக்குகள்:
ஆண்கள்: 5,915, பெண்கள்: 6,741. மொத்தம்: 12,656 வாக்குகள். சதவிகிதம்: 74%
ஜமீன் ஊத்துக்குளி
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் 15,545வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்: 7,441, பெண்கள்: 8,101, மூன்றாம் பாலினத்தவர்கள்: 3 
பதிவான வாக்குகள்
ஆண்கள்: 5,416, பெண்கள்: 5,863, மூன்றாம் பாலினத்தவர்கள்: 1. மொத்தம்: 11,280வாக்குகள். சதவிகிதம்:73%
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பேரூராட்சியில் மொத்தம்8,638 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்: 4,130, பெண்கள்: 4,507, மூன்றாம் பாலினத்தவர்கள்: 1.
பதிவான வாக்குகள்
ஆண்கள்: 3,309, பெண்கள்: 3,651, மூன்றாம் பாலினத்தவர்கள்: 1. மொத்தம்: 6,961 வாக்குகள். சதவிகிதம்: 81%பெரிய நெககம்பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம்2,706 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள்: 1,269பெண்கள்: 1,437.

பதிவான வாக்குகள்
ஆண்கள்: 1,053, பெண்கள்: 1,122. மொத்தம்: 2,175 வாக்குகள். சதவிகிதம்: 80%
ஒத்தகால் மண்டபம்
ஒத்தகால் மண்டபம் பேரூராட்சியில் மொத்தம் 12,816 வாக்காளர்கள் உள்ளனர். இதில்,  ஆண்கள்: 6,290, பெண்கள்: 6,519, மூன்றாம் பாலினத்தவர்கள்: 7

பதிவான வாக்குகள் 
ஆண்கள்: 4,593, பெண்கள்: 4,930, மூன்றாம்பாலினத்தவர்கள்: 3. மொத்தம்: 9,526. சதவிகிதம்: 74%.நீலகிரி: 62.68 சதவிகித வாக்குபதிவுநீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில்‌ 108 வார்டு, பேரூராட்சிகளில்‌ 186 வார்டுகள் என காலியாக இருந்த 294 பதவியிடங்களுக்கு சனியன்று தேர்தல் நடைபெற்றது.இதில், அதிகரட்டி, பிக்கட்டி மற்றும்‌ கேத்தி பேரூராட்சிகளில்‌ தலா ஒரு வேட்பாளர்‌ வீதம்‌ 3வார்டுகளில் வேட்பாளர்கள்‌ போட்டியின்றி
தேர்வு செய்யப்பட்டனர்‌.

மீதமுள்ள 291 வார்டுஉறுப்பினர் பதவிக்கு, மொத்தம்‌ 1,253 வேட்பாளர்கள்‌ போட்டியிட்டனர்‌.மொத்தம் 406 வாக்குச்சாவடிகள்‌ அமைக்கப்பட்டு, 55 வாக்குச்சாவடிகள்‌ பதற்றம்‌நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில்‌ நுண்பார்வையாளர்கள்‌ மற்றும்‌ நேரடி ஒளிப்பரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, காலை மந்தமாக இருந்த நிலையில், மெல்ல மெல்ல சூடுப்பிடித்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பேரூராட்சிகளில் 66.29 மற்றும் நகராட்சிகளில் 59.98 என சராசரியாக 62.68 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.