தருமபுரி, பிப்.7- தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாக னத்தை மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி துவக்கி வைத் தார். இந்த வாக்காளர் விழிப் புணர்வு பிரச்சார வாகனத் தின் மூலம், பிப். 7 முதல் பிப்.18 ஆம் வரை தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்த லுக்கான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரை யிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்து ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரன் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.