districts

img

உள்ளாட்சி அமைப்புகளை சிறப்பாக நிர்வாகம் செய்ய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

அவிநாசி, பிப்.15- திருமுருகன்பூண்டி நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு களை சிறப்பாக நிர்வாகம் செய்ய  மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி வேட்பாளர்களுக் வாக்களிக் குமாறு சிபிஎம் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்  கொண்டார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ர வரி 19 ஆம் தேதி நடைபெற உள் ளது. இந்நிலையில் திருமுருகன் பூண்டி நகராட்சியில் திமுக மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் 27 வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சா ரத்தில் ஈடுபட்டார். திருமுருகன் பூண்டி நகராட்சி அடுத்து இராக்கி யாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பிரச்சார கூட் டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், 100 சதவீத வெற்றி வாகை சூடும் மகத்தான கூட்டணி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல  கட்சிகள் கூட்டணி அமைத்து  போட்டியிட்டன. இக்கூட்டணியி னர் மோடியை விட்டால் இந்த நாட்டை ஆள நாதி கிடையாது என கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். என்னவாயிற்று, ஒரே ஒரு தொகுதி யில் மட்டும் அதிமுக வெற்றி பெற முடிந்தது. மீதமுள்ள 38 நாடாளு மன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் இந்தி யாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட் டணி ஆட்சியைப் பிடித்தது. தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கினர். அதிமுக மண்ணை கவ்வியது. அடுத்து ஒன் பது மாவட்டத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணியே மகத்தான வெற்றியை பெற்றது. இந்நிலை யில், இன்றைக்கு நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்ட சூழ்நிலையில் அதிமுக கட்சி கூட்டணி இன்றி தனித்து விடப்பட் டுள்ளது.  ஒருவேளை நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்திருந் தால், இந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற்று இருக் குமா? என்பதே சந்தேகம் தான்.  ஆனால், திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்க ளில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற  தேர்தல் நடைபெறுகிறது இத்த கைய சூழலில் திருமுருகன் பூண்டி  நகராட்சியில் 27 வார்டுகள் உள் ளன. இந்த வார்டுகளில் போட்டியி டுகின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 27 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற் றால் திருமுருகன்பூண்டி நகராட் சியை சிறப்பாக நிர்வாகம் செய்ய  முடியும். ஆகவே, உள்ளாட்சி அமைப்புகளை சிறப்பாக நிர்வா கம் செய்ய, மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளின் வேட் பாளர்களுக்கு  மக்கள் வாக்க ளிக்க வேண்டும். இவ்வாறு  கே.பாலகிருஷ்ணன் பேசினார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு  உறுப்பினர் கே.காமராஜ், மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் பி.முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர். பழனிச்சாமி, திமுக சேவூர் ஒன் றிய பொறுப்பாளர் பால்ராஜ், சிபிஐ நிர்வாகி ராமசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக திருப்பூர் மாவட் டத்தில் ஊத்துக்குளி பேரூராட்சி யில் மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியி லும், திருப்பூர் மாநகராட்சியில் அனுப்பர்பாளையம் ஆத்துப் பாளையம் சாலை சந்திப்பிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரை செய்தார்.அனைத்து பகுதிகளிலும் திராளா னோர் கலந்து கொண்டனர். தோழமை கட்சி நிர்வாகிகள், ஊழி யர்கள் அவருக்கு உற்சாக வர வேற்பு அளித்தனர்.