districts

img

பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

நாமக்கல், ஜூன் 23- நாமக்கல் அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில்  காலை உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு உட்பட்ட செங் கரை மலைக் கிராமத்தில் உண்டு உறைவிட பள்ளி இயங்கி  வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டார மலை கிராமங்களைச்  சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து  வருகின்றனர். இந்நிலையில். பள்ளியில் வழக்கம்போல் வியாழனன்று  மாணவர்கள் காலை உணவு சாப்பிட்டனர்.  இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி  மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவர், மாணவிகளை செங்கரை அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும், மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் அடைந் தற்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என்பது குறித்து  அதிகாரி கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், காலையில் சமைத்த  லெமன் சாதம் உணவு வழங்கப்பட்டதாகவும், அது  கெட்டுப்போனதாலேயே மாணவ மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டள்ளது என தெரிவித்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் எந்த ஒரு முறையான விசார ணையும் மேற்கொள்ளவில்லை என கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த, சம்பவ இடத்திற்கு விரைந்த சாலை  மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.