districts

img

உயிரிப் பல்வகைமை குறித்து குரல்குட்டையில் விழிப்புணர்வு

திருப்பூர், நவ. 8 - உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சியில் உயிரிப் பல்வகைமை மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது  குரல்குட்டை இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் இந்த  உயிர்ப் பல்வகைமை மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு, பறவைகள், பூச்சிகள், செடி கொடிகள் குறித்து தொடர்ந்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆவணப்படுத்தும் நிகழ்வு நடை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பறவை நடை, பூச்சி நடை என்று  பறவைகள் கணக்கெடுப்பு, பூச்சிகள் கணக்கெடுப்பு, செடி  கொடிகள் கணக்கெடுப்பு, பறவைகளுக்கும், பூச்சிகளுக் கும், செடி கொடிகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும்  ஆவணப்படுத்தி வருகின்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பற வைகள், பூச்சிகள் குறித்த புகைப்படங்கள், பதாகைகள், விழிப்புணர்வு ஆவணங்கள் புதனன்று வழங்கப்பட்டது. குரல் குட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளி, மடத்தூர் அரசு தொடக் கப்பள்ளி, மலையாண்டிபட்டினம் உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பறவைகள் கண்ட றியும் இந்த விழிப்புணர்வு ஆவணங்கள் வழங்கப்பட்டன.