districts

img

வீட்டு மனைப்பட்டா கேட்டு விதொச காத்திருப்புப் போராட்டம்

தருமபுரி, நவ.7- காலம் காலமாக குடியிருந்து வரும் போயர் சமூக மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என  வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், மாம்பட்டி ஊராட்சி, இட்லப்பட்டி  கிராமத்தில் காலம் காலமாக குடியி ருந்து வரும் போயர் இனத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இட்லப் பட்டி கிராமத்தில் உள்ள தெருக்க ளுக்கு சிமெண்ட் சாலை அமைத்துத் தர வேண்டும். மயான வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். குடியிருப் புக்கு செல்லும் குடிநீர் குழாய்களை சீரமைத்து தர வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் செவ் வாயன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அரூர் வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் கிளைச் செயலா ளர் கே.தங்கராஜ் தலைமை வகித் தார். இதில், மாநிலச் செயலாளர் ஜி.கனபதி, மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்ட துணைத்தலை வர் இ.கே.முருகன், ஒன்றியச் செய லாளர் கே.குமரேசன், தலைவர் டி. ஜடையாண்டி, பொருளாளர் பி.வீரப் பன், நிர்வாகிகள் வேலாயுதம், எம். தங்கராஜ், பி.சொக்கலிங்கம், சி.முரு கன் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.