கோவை, டிச.11- நெட் தேர்வு எழுத வந்த பேராசிரி யர்களின் தாலி, மெட்டி, அர்ணாக் கொடி ஆகியவற்றை கழற்றச் சொல்லி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கோவை தொண்டா முத்தூர் ரங்கநாதன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் அத்துமீ றல் கடும் விமர்சனத்தை ஏற்படுத் தியுள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்க ழகங்களில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளையர் இள நிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறவும் (JRF) தேசிய தகுதி தேர்வு (NET) நடத்தப்படு கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை என ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்க ளில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. UGC சார்பில் நடத்தப் படும் இந்த நெட் தேர்வில் முது கலை படித்து முடித்த மாணவர்க ளும், கல்லூரி விரிவுரையாளர்க ளும் பங்கேற்று தேர்வு எழுதி வரு கின்றனர். தேர்விற்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி விரி வுரையாளர்களிடம், கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக பெண் கள் கம்மல், செயின், மோதிரம், கொலுசு, தாலி, மெட்டி, தலைக்கு கிளிப் போன்றவை அணிந்து செல் லக்கூடாது எனவும், ஆண்கள் வெள்ளி அரைஞான் கயிறு உட்பட எந்த விதமான உலோ கப் பொருட்களும் அணிந்து செல் லக்கூடாது என கல்லூரி நிர்வாகம் கெடுபிடி காட்டிய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ஹ கோவை மாவட்டம் தொண்டா முத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி யில் உள்ள பொறியியல் கல்லூரி யில் நெட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்விற்கு வந்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் அணிந்திருந்த வெள்ளி அரை ஞாண் கயிறை கழட்டுமாறு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் UGC விதிமுறைகளில் இல்லாத ஒன்றை செய்ய முடி யாது என கூறி அவர் கழட்ட மறுத் துள்ளார்.
இதன் காரணமாக கல்லூரி விரி வுரையாளர் அணிந்து இருந்த வெள்ளி அரைஞாண் கயிறு மேல் டேப் ஒட்டி, அதன் பின்பே தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதித்துள்ளனர்.இதே போன்று தேர் வுக்கு வந்த மாணவியர் பலரும் அணிக லன்கள் அணியா மல், தலைவிரி கோலமாய் எழு தியதாக தேர் வில் பங்கேற்ற வர்கள் தெரிவித் த்தனர். UGC அறிவிக்காத கட்டுப்பாடு களை, சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்டு அராஜகத்துடன் செயல்பட்ட ரங்கநாதன் பொறியி யல் கல்லூரியின் மீது தேர்வு எழுத வந்தவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து உரிய நடவ டிக்கை எடுக்க UGC, மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையருக்கு புகார் அளித்துள் ளனர். இதுகுறித்து தேர்வு எழுதச் சென்ற பேராசிரியர்கள் கூறுகை யில், நீட் தேர்வை நடத்துவதை போலவே, தேர்வு எழுத வந்த கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரை கம்மல், செயின், மோதிரம், கொலுசு, மெட்டி அணிந்து தேர்வு அறைக்கு செல்லக் கூடாது, தலைமுடிக்கு கிளிப் அணிந்து செல்ல அனுமதியில்லை எனக் கூறி அராஜகத்தில் ஈடு பட்டுள்ளனர். UGC அவ் வாறு எந்த விதிமுறை யையும் குறிப்பிட வில்லை. ஆண்கள் பெல்ட் அணிந்து செல் லக்கூடாது,அரைஞாண் கயிறு வெள்ளியில் (Silver) அணிந்திருந் தால் தேர்வு எழுத அனுமதியில்லை என்று திருப்பி அனுப்புகின்றனர்.
காரணம் கேட்ட போது மெட்டல் எது வும் இருக்கக் கூடாது என்கின்றனர். இதைவிட கொடுமை என்ன வென்றால், பேண்ட் ஜிப்பில் கூட மெட்டல் இருக்கிறது, இந்த கோமா ளிகள் அதையும் என்ன மெட்டல் டிடெக்டரில் சத்தம் வருகிறது என கேட்கின்றனர். அநாகரீகமாக நடந்து கொண்டு தேர்வு எழுத வந்த வர்களை அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். ஒரு கட்டத்தில், பேண்ட் அணிந்து தேர்வு அறைக்கு செல்லலாமா? அல்லது அதையும் கழட்டி வைத்துவிட்டு செல்ல வேண்டுமா? என வாக்கு வாதம் நடத்திய பிறகே தேர்வு அறைக்கு அனுமதித்தனர். UGC அறிவிக்காத கட்டுப்பாடுகளை, சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்டு அராஜகத்துடன் செயல் பட்ட ரங்கநாதன் பொறியியல் கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என UGC, மாநில மனித உரிமை ஆணை யம், தேசிய மனித உரிமை ஆணை யம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையருக்கு புகார் அளிக்க உள்ளோம் என்றனர். மேலும், பேருந்து வசதியோ, அடிப் படை வசதிகளோ இல்லாத இது போன்ற பொட்டல் காட்டில் இருக் கும் கல்லூரியில் மாலை 3 மணி முதல் 6 மணி தேர்வு எழுதிவிட்டு எப்படி அனைவரும் வீடு திரும்பு வார்கள் என்ற அடிப்படை ஞானமே இவர்களுக்கு இல்லை. இனிவ ரும் காலங்களில் UGC - NTA இது போன்ற தொலைதூர கல்லூரிக ளில் தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.