சேலம், பிப்.25- சேலம் மண்டலத்திற்குட்பட்ட பகுதி களில் ஆய்வு மேற்கொண்ட டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், மதுபான விற் பனை விதிமீறல்களில் ஈடுபட்ட 10 பேரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து உத் தரவிட்டார். சேலம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து டாஸ்மாக் மாவட்ட மேலா ளர்கள் ஆய்வுக்கூட்டம் சேலம் டாஸ் மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலு வலகத்தில் நடைபெற்றது. இதில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர் பாக மதுபான சில்லறை விற்பனை கடை களில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து பல்வேறு அறிவுரை கள் வழங்கப்பட்டன. மேலும், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மதுபான கிடங் கில் சரக்கு இருப்பினை முறையாக பராமரிக்க வேண்டுமெனவும், காத்தி ருப்பு லாரிகள் அதிக அளவில் இல்லாத வாறு பணியாற்ற வேண்டுமெனவும் பல் வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ச.விசாகன் தலைமையிலான பறக்கும் படையினர் சேலம் மண்டலத்திற்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப் பேட்டை (அரக்கோணம்) ஆகிய ஏழு மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட மது பான சில்லறை விற்பனை கடைகளில் திடீர் தணிக்கை மேற்கொண்டனர். மேற் படி தணிக்கையில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை விதிமீறல்களில் ஈடு பட்ட 26 கடைப்பணியாளர்களுக்கு ரூ.1,72,280 அபாரதம் விதிக்கப்பட்டது. மேலும், இவர்களில் 10 பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளனர்.