அவிநாசி, ஆக.16- அவிநாசி அருகே கானாங் குளம் ஆதிராவிடர் காலனி யில் அடிப்படை வசதிகள் செய் துதரக் கோரி அப்பகுதி மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி கிரா மசபையில் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவி நாசி ஒன்றியம் அய்யம்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட கானாங்குளம் ஆதி திராவிடர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் ஓராண்டுக்கு மேலாகியும் ஆற்று குடிநீர் வருவதில்லை. மயானத்தில் பாதை, மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்ப டுத்திக் கொடுக்கவில்லை. ஒரே வீட்டில் 2 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வரும் நிலை யில், க.ச.எண் 103ல் பட்டா வழங்க வேண்டும். கானாங்குளம் பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் அமைப்பதற்கு டெண்டர் விட்டு கட் டடப்பணி தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும், கட்டிடம் கட்டப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. பாதியில் நின்ற இப்பணியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கானாங்குளம் பகுதி மக்கள் கிராமசபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.