districts

img

மயான வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

கோபி, மார்ச் 4- கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே மயானம் மற்றும் குடிநீர்வசதி கேட்டு நூற்றுக்கும் கிராம மக்கள் திடீரென சாலை மறிய லில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அடுத்த இந்திராநகர், மூணாம்பள்ளி பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள், ஐம்பது  ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். ஆனால், இங்கு அடிப்படை வசதிகள் கூட ஏதும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக அப்பகுதியில், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட மயான வசதி இல்லாத நிலையே உள்ளது. ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்தின் இடத்தையும், பாதையையும், தனிநபர்கள் ஆக்கிர மித்து கட்டிடங்களை கட்டியுள்ள னர்.  எனவே, மயானத்தை ஆக்கிர மித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து, மயானத்திற்கு பாதை மற்றும் மயானத்தை விரிவுபடுத்தி தரவேண்டும். அப்பகுதியில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோ கம் செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த நம்பியூர் காவல் துறை யினர், சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஏழு நாட்களுக் குள் கோரிக்கைகள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்தனர். இதன் பின் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.