districts

img

கல்குவாரிகளால் பாதிப்பு: கிராமமக்கள் உண்ணாவிரதம்

நாமக்கல், ஜன.4- கல்குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வரும்  நிலையில், அப்பகுதியில் உரிய அளவீடு செய்ய வேண்டும்  என வலியுறுத்தி எலச்சிபாளையம் அருகே பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சி பாளையம் ஒன்றியம், கோக்கலை ஊராட்சி, எளையாம் பாளையம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகு, செயல் படாமல் இருந்து வந்த இந்த கல்குவாரிகள் மீண்டும் செயல் பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே இந்த கல் குவாரிகளால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக அப்பகுதி  கிராம மக்கள் கூறி வரும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அள வுக்கு குவாரிகளில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள் ளதா? சட்ட விதிகளுக்கு உட்பட்டு குடியிருப்புகள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் இருக்கின்ற இடங்களில் குவாரிகள் செயல்பாட்டால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து வருவாய்த் துறையினர் உரிய அளவீடு செய்து அனுமதி வழங்க வேண்டும் என கிராம மக்கள் பல்வேறு வகை யான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய்  கோட்டாட்சியர் சுகந்தி, காவல் துறை துணை கண்காணிப் பாளர் இமயவரம்பன் உள்ளிட்டோர் நேரில் வந்து 45 நாட்க ளுக்குள் அளவீடு செய்து தருவதாக உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது 85 நாட்களாகியும் எந்த அளவீடும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக உரிய அள வீட்டினை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் அப்பகுதி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். அளவீடு செய்து தரும் வரை தங்களுடைய போராட் டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். போராட்டக்குழு தலை வர் பழனிவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள் பூசன், செந்தில் குமார், தமிழ்நாடு விவசாய சங்க நிறுவனர் ஈசன் முருக சாமி, ஓய்வுபெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரங்கசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரி கள், இருதினங்களுக்குள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப் படும் என உறுதியளித்தன் பேரில் உண்ணாவிரதப் போராட் டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.