திருப்பூர், ஆக. 8 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராமப்புற ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்கு நர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய் மைக் காவலர்கள், டிபிசி பணியாளர் களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை மையப்படுத்தி திருப்பூரில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் தலைவர் பி.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிரா மப்புற உள்ளாட்சி பணியாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி ஊதியம் அறிவிக்க வேண்டும், 7ஆவது ஊதி யக்குழு அரசாணைப்படி 2017 முதல் வழங்க வேண்டிய 69 மாத கால நில வைத் தொகையை உடனே வழங்க வேண்டும், தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட் டன. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். உடுமலை, காங்கேயம், குடி மங்கலம், ஊத்துக்குளி, பொங்கலூர், தாராபுரம், திருப்பூர், மடத்துக்குளம், குண்டடம், மூலனூர், பல்லடம் வட்டார நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.