districts

img

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடுக

சேலம், செப்.8- திமுக அருசு தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊர்ப்புற நூலகப் பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் 1500 ஊர்ப்புற நூலகர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட எந்த பணப்பலனும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகளவில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் உள்ள 178 ஆவது தீர்மானத்தை நிறைவேற்றி பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊர்ப்புற நூலகப் பணியாளர்கள் சேலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.